Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, January 23, 2012

தேர்தலில் போட்டியிட குண்டு வெடிப்பு தீவிரவாதி மனு தாக்கல் ?

பலியா (உத்தரப் பிரதேசம்),  மாலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் ராணுவ அதிகாரி, தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், மாலேகாவ் 2008, செப்டம்பர் 29-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் 12 பேரை போலீஸôர் கைது செய்தனர். இதில் முதல் எதிரியான லெப்டினென்ட் கலோனல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக மேஜர் (ஓய்வு) ரமேஷ் உபாத்யாய் (60) குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இப்போது மகாராஷ்டிரத்தின் ராய்கார்க்கில் உள்ள தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் பாய்ரியா தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

தீவிரவாதி ரமேஷ் உபாத்யாய் சார்பில் அவரது மகன் விஷால், திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அகில பாரத ஹிந்துத்துவா மகா சபா சார்பில் அவர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

(மதவெறி- பயங்கரவாத சக்திகளுக்கு எதிராகவும், மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை ஆகியவற்றை உயர்த்திப் பிடித்து போராளிகள் களம் இறங்குவது அவசியமாகும்.)

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!