Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, January 2, 2012

உலக (சமாதான) சாதனைக்காக வேண்டி பூ மாலை கோர்ப்பு

சென்னை, ஜன 3: பல்வேறு விதமான போட்டிகள் மற்றும் அரிய சாதனைகள் செய்து உலக அளவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பார்கள்.

அந்த வரிசையில் அம்பத்தூர் அன்னை வைலட் கலைக்கல்லூரியும், சேத்துப்பட்டு அரிமா சங்கமும் இணைந்து உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் உலகிலேயே நீளமான பூ மாலை கோர்க்க முடிவு செய்தனர்.

இந்த சாதனை நிகழ்ச்சி நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடந்தது. தொழில் அதிபர் என்.ஆர். தனபாலன், தலைமை தாங்கினார். மொத்தம் 2 டன் கேந்தி பூக்கள் கொண்டு வரப்பட்டது. 80 பேர் அதனை மாலையாக கோர்த்தனர்.

பின்னர் நேரு ஸ்டேடியத்தை சுற்றிலும் 6 சுற்றுகளாக பூ மாலையை வைத்திருந்தனர். காலை 9 மணிக்கு பூ மாலை கட்டும் பணி தொடங்கியது. 3 மணி நேரத்தில் கட்டி முடித்தனர்.

உலக அளவில் இதற்கு முன்பு அமெரிக்காவில் 3 கி.மீ. நீள பூ மாலை கட்டபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் மத தலைவர்கள் எஸ்ரா சற்குணம், மகாநமோ தியோரா, மாதாஜி யத்தீஸ்வரி, குமாரபிரியா, ஜியானி பிரதிபால்சிங், எஸ்.எம். இதயதுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!