Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, January 20, 2012

காதல் கசந்ததால் குழப்பத்தில் நயன்தாரா!

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் 2009-ல் காதல் மலர்ந்தது. அப்போதே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆனால் இதுவரை திருமணம் நடக்காமல் இழுத்தடிப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

படங்களில் நடிப்பதையும் நிறுத்தினார். இதனிடையே முதல் மனைவி ரமலத்தின் குழந்தைகளுடன் பிரபுதேவா தொடர்பு வைத்துள்ளது பிடிக்காததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், பிரபுதேவாவை தனது வீட்டுக்குள் விடாமல் வெளியில் பல மணி நேரம் நயன்தாரா காக்க வைத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவை வதந்திகள் என்றும் விரைவில் நயன்தாராவுடன் திருமணம் நடக்கும் என்றும் பிரபுதேவா அறிவித்தார்.

இந்த நிலையில் பிரபுதேவா தற்போது அக்ஷயகுமாரை வைத்து இந்திப்படம் இயக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். அவர் திருமணத்துக்கு காலம் கடத்துவதால் நயன்தாரா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கில் 5 சினிமா நிறுவனங்கள் தங்கள் படங்களில் நடிக்க நயன்தாராவை அணுகி உள்ளதாகவும், மீண்டும் நடிக்கலாமா என்று அவர் யோசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!