Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, January 28, 2012

டுவிட்டரின் சர்ச்சையும்! புதிய திருப்பமும்!!

இந்தியாவில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாவைப் பற்றி, கிண்டலான செய்தி, இணையதளம் ஒன்றில் வெளிவந்தது. இதையடுத்து, கூகுள், யாகூ உள்ளிட்ட இணைய நிறுவனங்களும், "பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைத் தளங்களும், தங்களுக்கு வரும் செய்திகளை, இந்திய சட்டப்படி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது.

ஆனால், இந்த முயற்சி, எழுத்து சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் சவால் என, பலர் கொதித்தெழுந்தனர். இறுதியில், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள், அத்தகைய தணிக்கைக்கு சாத்தியமே இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தன.

இவ்விவகாரத்தில், புதிய திருப்பமாக, "டுவிட்டர்' நிறுவனம், நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு, செய்திகளைத் தணிக்கை செய்யப் போவதாக அறிவித்தது. மேலும், தணிக்கை செய்யப்பட்டதற்கான காரணம், அந்தந்த நாட்டு அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் தணிக்கைக் கோரிக்கைகள் ஆகியவற்றையும் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, இணைய உலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதே நேரம், "டுவிட்டர்' பயன்படுத்துவோர் மத்தியில், பெரும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. இதையடுத்து, அவர்கள், "டுவிட்டரின்' இந்த திட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!