ஒரு படம் சுமாராக ஓடினால் அதற்கு பலவழிகளிருந்தும் தொல்லைகள் கொடுப்பார்கள் ஆனால் இது பலரிடமிருந்து பாராட்டு பெற்றதால் மேலும் சிக்கலை உண்டாக்க இதுபோல் சில போராட்ட அறிவிப்பு.
இந்த படத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பச்சமுத்து பற்றி இழிவான வசனம் இடம் பெற்றுள்ளதாக கூறி, அந்த வசனத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை ஆண்டி, பண்டார நாரி என்ற வார்த்தைகளையும் அப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர்.
நண்பன் திரைப்படத்தில் சில காட்சிகளில் ஆண்டி, பண்டாரம் என ஜாதியின் பெயரை குறித்து வரும் வசனங்கள் அச்சமுதாய மக்கள் மனம் புண்படும் அளவிற்கு அமைந்துள்ளது. ஆண்டி என்றும், பண்டாரம் என்றும் வரும் அந்த வார்த்தைகளையும், பாரி, பூரி, கக்கூஸ் நாரி என்ற வார்த்தைகளையும் அப்படத்தில் இருந்து நீக்க வேண்டும். அந்த வசனத்தை நீக்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்கள்.
இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் இதுகூட இப்படத்திற்கு பப்ளிசிட்டிதான்.






0 comments:
Post a Comment