Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 29, 2012

தொடரை இழந்த இந்திய அணிக்கு புதிய கேப்டன்!!

புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற இந்திய அணி, தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து, அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளது.

முதலில் கேப்டன் மாற்றப்பட உள்ளார். இதன் மூலம் தோனி மற்றும் சேவக் இடையிலான "ஈகோ' பிரச்னைக்கு முடிவு காணலாம். கேப்டன் என்ற முறையில் தன்னால் சேவக்கை கட்டுப்படுத்த இயலவில்லை என தோனி புலம்புகிறார். துவக்க வீரராக பொறுப்பாக "பேட்' செய்யவில்லை என புகார் கூறுகிறார். மறுபக்கம் தோனியின் கேப்டன் உத்திகளை ஏற்க மறுக்கிறார் சேவக். வீரர்கள் தேர்வு, "பீல்டிங்' வியூகம் போன்றவற்றில் தோனி தவறு செய்வதாக குறிப்பிடுகிறார். துணை கேப்டன் என்ற முறையில் தன்னிடம் கலந்து ஆலோசிப்பது இல்லை என்றும் குற்றம்சாட்டுகிறார். இவர்களது மோதல், அணியில் பிளவை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இருந்து 2013ல் ஓய்வு பெறப் போவதாக தோனி தன்னிச்øயாக அறிவித்தது தேர்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,""ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருக்கும் போது, 2013ல் நடக்க வேண்டிய விஷயம் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை, என்றார்., தோனிக்கு பாடம் புகட்டும் வகையில், அவரை டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்க, பி.சி.சி.ஐ, முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!