Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, January 31, 2012

அனுமதி மறுக்கப்பட்ட மு க ஸ்டாலின் !!

சட்டசபையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, அவையில் செல்போன் பயன்படுத்தியது தொடர்பான பேரவை உரிமைக் குழுவின் அறிக்கை சட்டசபையில் இன்று (30.01.2012) தாக்கல் செய்யப்பட்டது.

இதனை உடனடியாக எடுத்துக்கொண்ட சபாநாயகர் டி.ஜெயக்குமார், உரிமைக்குழுவின் பரிந்துரையின்படி 10 நாட்களுக்கு டி.ஆர்.பி. ராஜா பேரவை கூட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். இந்தக் காலக்கட்டத்தில் அவர் பேரவை உறுப்பினர் சம்பளம் உள்ளிட்ட, எந்தவித ஆதாயங்களையும் பெற முடியாது என்றும் சபாநாயகர் அறிவித்தார்.


இதையடுத்து உரிமைக்குழுவின் அறிக்கை குறித்தும், தண்டனையை குறைப்பது பற்றியும் திமுக சட்டமன்ற குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச முயன்றார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!