Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, January 7, 2012

கொலை வெறியுடன் அலையும் கொ (லை) ள்கை கூட்டம்?

சேலம் பழைய பேருந்து நிலையம் கடைகளில் அராஜகத்தின் உச்சத்திற்கு சென்றனர்.

பழைய பேருந்து நிலையம் அருகிலேயே சேலம் தெற்கு சட்டமன்ற அலுவலகம் உள்ளது அங்கு இருந்து கிளம்பிய அ.தி.மு.க.வினர் முழு போதையில் கடைகளில் தொங்கிய நக்கீரன் விளம்பர பேப்பர்களை கிழித்தனர். உள்ளே கடைகளுக்குள் இருந்து நக்கீரனை பறித்தனர் எதற்காக பரிக்கிறீர்கள் என கடை உரிமையாளர்கள் கேட்க 'கெட்ட வார்த்தையில் பேசிய அ.தி.மு.க.வினர்' நக்கீரனை பறித்து எடுத்து சென்றனர். உடனே பணம் கேட்க ,'அம்மா ஆட்சியிலா பணமா கேட்குற என்று 50க்கும் மேலானா நக்கீரனை எடுத்து சென்றனர். அந்த பகுதியில் அனைத்து கடைகளிலும் இதே நிலைமை தான். பேருந்து நிலையத்தில் இருந்து எட்டும் தூரத்தில் இருக்கும் சேலம் டவுன் காவல்துறை கண்டுகொள்ளவே இல்லை.

காவல்துறை எதிரிலேயே ஒரு பீடா கடை உள்ளது அங்கு குவிந்த கரைவேட்டிகள் அந்த கடையில் இருந்த பெண்மணியை மிரட்டிவிட்டு 17 நக்கீரனை பறித்து சென்றனர். இதை வேடிக்கை பார்த்தபடியே இருந்தது காவல்துறை

ஒருபக்கம் பறித்தபடி இருக்க மறுபக்கம் சட்டமன்ற அலுவலகம் திரண்ட தெற்கு எம்.எல்.ஏ மற்றும் மா.செ வான எம்.கே.செல்வராஜ் மற்றும் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ வெங்கடாசலம் ஆகியோர் கடும் கோபத்தில் பேச தொடங்கினர் என்ன பண்ணலாம் என திட்டமிட்டனர்

நக்கீரன் ஏஜண்ட் அலுவலகம் அடித்து நொறுக்கலாம் என ப்ளான் போட்டனர் ஆனால் அது எங்கு உள்ளது என தெரியாததால் குழம்பினர் நக்கீரன் நிருபரை அடிக்கலாமா? என பேசினர். இவ்வாறு திட்டமிட்டபடி இருக்க 50க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் குவிய தொடங்கினர். அவர்களை எல்லாம் திரட்டி கொண்டு அருகில் இருந்த அண்ணா சிலை அருகே சென்று நக்கீரன் இதழ்களை எரித்தனர்.

அங்கேயே நக்கீரன் அலுவலகம் எங்க இருக்கு தேடுங்கடா என சில அ.தி.மு.க.வினர் கத்த டூ வீலரில் நமது அலுவலகத்தை தேட கிளம்பியது ஒரு கும்பல்., காட்டுமிராண்டிதனமாக அடித்து உதைக்க வெறியேறிய கண்களோடு சீறிக்கொண்டு சுற்றி வந்தனர் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவினர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!