Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, November 14, 2011

அத்வானி ரத யாத்திரையில் முட்டை அபிசேகம் செய்து வரவேற்ற மக்கள்

பட்டிண்டா : ஊழலுக்கு எதிராக பா.ஜ., தலைவர் அத்வானி, நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அவரது (ரத்த) யாத்திரை நடக்கிறது. பட்டிண்டா மாவட்டத்தின் சங்கீரா பகுதியில் அவர் நேற்று ரதத்தில் சென்று கொண்டிருக்கும் போது, சிம்ரஞ்சித்சிங் மான் தலைமையிலான சிரோன்மணி அகாலிதள கட்சி ஆதரவாளர்கள் காலிஸ்தானை ஆதரித்தும், அத்வானியை எதிர்த்தும் கோஷம் போட்டனர். முன்னெச்சரிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதே பகுதியின் மற்றொரு இடத்தில், முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நஜினா பேகம் என்பவரது தலைமையில் அத்வானியை எதிர்த்து கோஷம் போட்டனர். சாலை வழியாக ரத யாத்திரை சென்றபோது வயல்வெளியில் நின்றிருந்த எதிர்ப்பாளர்கள் சிலர், அவரது ரதத்தின் மீது, முட்டைகளை எறிந்தனர். இன்னும் சிலர் கறுப்பு கொடிகளைக் காட்டினர்.

@ மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். “தன்னலக் குறிக்கோள்’ மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், “வெறியாடும் வாய்ப்பி’லேயே விடுதலையின் திருப்தியை அடையும். ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும் இந்த ரத (ரத்த) யாத்திரை கூட்டம்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!