Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, November 7, 2011

கர்ப்பிணி பெண்களிடம் காசு கறந்தவர் கைது?

வேலூர் மாவட்டம் காட்பாடி துணை சுகாதார நிலையத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு உதவி திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 6 ஆயிரம் ரூபாய் நிதியை லஞ்சம் பெற்றுக்கொண்டு வழங்குவதாக வந்த ரகசிய தகவலையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வரும் சரளா என்பவரிடம் இதுகுறித்து விசாரணை லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் இருந்து கணக்கில் வராத 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். 20 கர்ப்பிணி பெண்களுக்கு காசோலை வழங்கியபோது, ஒரு காசோலைக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம், 20 ஆயிரம் ரூபாயை சரளா வசூலித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பயனாளிகளுக்கு வழங்க வைத்திருந்த 90 ஆயிரம் மதிப்புடைய காசோலைகளையும் போலீசார் கண்டுபிடித்தனர்., பின்பு கைதுசெய்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!