Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, November 13, 2011

திருமணத்துக்குபிறகு சினியிலிருந்து ஒதுங்கியவர் சின்னத்திரையில்

திருமணத்துக்கு பிறகு கலைத்துறையில் இருந்து விலகி, தனது ரசிகர்களை தவிக்க விட்ட நடிகை மாளவிகா, மீண்டும் நடிக்க வருகிறார்.

ஆனால் சினிமாவில் இல்லை; சின்னத்திரையில்! இந்த அதிரடி முடிவு குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான்கு வயதில் ஒரு மகன், ஒன்றரை வயதில் ஒரு மகள் என எனது இரண்டு குழந்தைகளை கவனிக்க எனக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. சினிமாவில் நடித்தால் குழந்தைகளை கவனிக்க முடியாமல் போய் விடும். அதனால்தான் நான் தொலைக்காட்சி மற்றும் விளம்பரப் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

மாளவிகா நடிக்க வருகிறார் என்றால் கலர் கலராக கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கும் திரையுலகிற்கு, சின்னத்திரை சளைத்ததா என்ன? சிலபல சின்னத்திரை இயக்குனர்கள் மாளவிகாவுக்கு கதை சொல்ல தயாராகி வருகிறார்களாம். எந்த தொடரில் நடிப்பது என இன்னமும் முடிவு செய்யாத அம்மணி, விரைவில் சின்னத்திரை தொடரில் பளபளக்கும் புடவை கட்டி நடிப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!