Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, March 2, 2012

இத்தனை கோடிகளா சூப்பிரண்ட் ஜெய்லரிடம்!?

போபால்: மத்தியபிரதேச மாநில ஜெயில் சூப்பிரண்ட் ஒருவரின் வீட்டில் லோக் ஆயுக்தா போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்குரிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் புருஷோத்தம் சோம்குன்வர். இவர் தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகளைக் குவித்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில், இவரது வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

சோம்குன்வரின் இந்தூர் மற்றும் போபாலில் உள்ள வீடுகளில் 40-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ரொக்கப் பணம் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஐந்து பங்களாக்கள், மருத்துவமனை, நான்கு கடைகள், ஐந்து இடங்களில் நிலங்கள் ஆகியன இவருக்கு உள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது.

பார்வா, பலாஸி, கம்கேரா ஆகிய இடங்களில் 14 ஏக்கர் நிலம், இந்தூரில் 35 லட்சம் மதிப்பிலான வீடு ஆகியவையும் இவற்றில் அடங்கும். 7.64 லட்சம் ரூபாய் ரொக்கம் வீட்டிலும், வங்கியில் 70 லட்சம் ரூபாயும், 8.48 லட்சம் ரூபாய் மதிப்பிலான எல்.ஐ.சி பாலிசியும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!