Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, March 13, 2012

இலவசம் கொடுத்து இடம் பிடிக்க பார்க்கும் ஜெயா! ஸ்டாலின்!!

சங்கரன்கோவில், மார்ச்.14: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டுவதாக அமையும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சங்கரன்கோவிலில் 2-வது நாளாக பிரசாரம் மேற்கொண்டுவரும் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், எப்படியும் இந்த தேர்தலில் வெற்றி பெற பல கோடிகளை (இலவசம்-பணம், பொருள்கள்) ஜெயலலிதா சிலவு செய்கிறார்.

இத்தேர்தல் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டும் விதத்தில் இருக்கும். தலைமை செயலகத்தை புதிய கட்டிடத்தில் இருந்து கோட்டைக்கு மாற்றினார்கள். தற்போது சங்கரன்கோவிலுக்கு மாற்றியுள்ளார்கள் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், திருமங்கலம் இடைத்தேர்தலைப் போன்று அழகிரியும் நானும் கூட்டாக பிரசாரம் செய்வோம். வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி உள்பட அனைத்து கிராமங்களிலும் பிரசாரம் செய்ய உள்ளேன் எனத் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!