Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, March 20, 2012

தேசம் பற்றி பேசும் தேச துரோகிகள்??

கொச்சி:’ஆரோக்கிய உரிமை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த மனித உரிமை ஆர்வலர் டாக்டர்.பினாயக்சென்னை தீவிரவாத சங்க்பரிவார மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் உறுப்பினர்கள் தடுக்க முயன்றது சட்டக்கல்லூரியில் சலசலப்பை உருவாக்கியது. போலீஸார் வந்து நிலைமையை அமைதிப்படுத்தினர்.

‘பினாயக் சென் வெளியேறு!’ என்று கோஷமிட்டு வந்தே மாதரம் என கூச்சலிட்ட ஏ.பி.வி.பியினர் நிகழ்ச்சி நடக்கும் ஹாலில் ஜன்னல் வழியாக காகிதங்களை சுருட்டி வீசினர். மாவோயிஸ்ட் என்றும் தேசத்தை காட்டிக் கொடுத்தவர் என்றும் தேசப்பக்தியில்(?) ஊறிப்போன ஏ.பி.வி.பியினர் பினாயக் சென்னை தடுக்க முயன்றனர். கருத்தரங்கை சீர்குலைக்க முயன்ற ஏ.பி.வி.பியினரை போலீஸார் வெளியேற்றினர்.

தேசத்தை காட்டி கொடுத்ததும், தேசத்தந்தை காந்திஜியை சுட்டு கொன்றதும் இந்த ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பு அதன் கிளைதான் சங்கபரிவாரம்தான் என்பது நாடறிந்த உண்மை.

தேச தந்தையை கொன்ற கும்பலுக்கு தேசப்பற்றை பற்றி பேச (ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு) என்ன தகுதி உள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!