Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 25, 2012

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாயா (சச்சின்) நம்மாளு!!

மும்பை: சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சதத்தில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சச்சின். அவரின் சாதனையை பாராட்டி பத்திரிகை ஆசிரியர்கள் சார்பில் மும்பையில் பாராட்டு விழா நடந்தது.

விழா முடிந்ததும், பத்திரிகை ஆசிரியர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியதாவது: இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என நோக்கத்தில் தான் விளையாடி வருகிறேன். எனது சாதனைகளுக்காக நான் கிரிக்கெட் விளையாடவில்லை. சதத்தில் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது காலத்தில் உலகக்கோப்பையை இந்தியா வென்றது ஒரு மிகப்பெரிய சாதனையும், மகிழ்ச்சியும் ஆகும்.

எனது சாதனையை இந்தியர் முறியடிப்பார், எனது ஓய்வு குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன. நான் எப்போது ஒய்வு ‌பெற வேண்டும் என்பதை யாரும் எனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. நேரம் வரும்போது நானே ஓய்வை அறிவிப்பேன். இதுவரை ஓய்வு பற்றி சிந்திக்கவில்லை. விருப்பம் உள்ளவரை இந்தியாவுக்காக ஆடுவேவன்.

சச்சின் கூறுவது பொருத்தமாக பட்டாலும் இப்பெரும் புகழும் இருக்கும்போதே கிரிக்கெட்டிலிருந்து தானாக ஒய்வு பெற்றால் பெரும் புகழுடன் அவரிடமிருக்கும் இல்லையேல் ரசிகர்கள் மற்றும் செலக்ட்டர்களால் ஒதுக்கப்படுவார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!