Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, March 9, 2012

ஹீரோக்களை வளைக்க கற்று வைத்திருக்கும் அங்காடித்தெரு நாயகி!!

"அங்காடித்தெரு’ அஞ்சலி என்பதே பெயராக மாறும் அளவிற்கு அந்த படத்தின் மூலம் புகழ்பெற்றார் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடித்தெரு படங்களுக்காக பிலிம் ஃபேர் அவார்ட் வாங்கினார் அதன் பின் மங்காத்தா எங்கேயும் எப்போது என எல்லாமே வெற்றிப் படங்கள் தான்.

முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் அளவிற்கு மார்கெட் வளர்ந்த பிறகு “யாரையாவது காதலிக்கிறீர்களா?“ என்பது அனைத்து நடிகைகளிடமும் கேட்கப்படும் கேள்வி தான் என்றாலும் அஞ்சலியிடம் கேட்காமல் விடவில்லை.

இந்த கேள்விக்கு அஞ்சலி “ ஆம் நான் கூட காதலிப்பேன். எல்லா நடிகர்களையும் காதலிப்பேன். அனைத்து நடிகர்களுடனும் நடித்து படத்தில் அவர்களை காதலித்துவிடுவேன். அதன் பிறகு தான் என் வாழ்வின் உண்மையான ஹீரோவை கண்டுபிடிக்க வேண்டும்“ என்று சிரித்த முகமாக பதிலளித்தார்.

அஞ்சலி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் மசாலா கஃபே என்ற படத்தில் விமல், சிவா என இரண்டு கதாநாயகன்களுடன் நடிப்பதை பற்றி பேசும்போது அதை விடுங்க சார் என்று ஆர்வத்துடன் அஞ்சலி பேசுவது அவர் நடிக்கும் தெலுங்கு படத்தை பற்றித் தான்.

“மகேஷ் பாபு, வெங்கடேஷ் ஆகிய இரு டிரெண்ட்செட் தெலுங்கு நடிகர்களும் இணையும் படம் “சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு“. இந்த படத்தில் சீதம்மா என்ற கேரக்டரில் தான் நான் நடிக்கிறேன்“ என்று பெருமிதம் அடைகிறார். இந்த படம் தனக்கு நல்ல பிரேக்காக அமையும் என்பது அஞ்சலியின் எதிர்பார்ப்பு., ஹீரோக்களை எப்படி வளைக்கலாம் என்று அங்காடித்தெரு நாயகி கற்று வைத்துள்ளார். ஆல்த பெஸ்ட் அஞ்சலி.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!