Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, March 30, 2012

மாரடைப்பை முன்கூட்டியே அறிய முடியும் விஞ்ஞானிகள்!

நியூயார்க்: சிகரெட் பிடிப்பவர்கள், உடல் குண்டானவர்கள் மற்றும் ரத்தத்தில் கொழுப்பு சத்து இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால் இவர்களுக்கு எப்போது நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பு ஏற்படும் என்பதை டாக்டர்களால் முன் கூட்டியே அறிய முடிவதில்லை.

தற்போது ஒரு சிறிய ரத்த பரிசோதனை மூலம் மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகளை கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் உள்ள எண்டோ திலியல் செல் (உள் அடுக்கு படலம்) மாரடைப்பு நோயாளிகளுக்கு வழக்கத்தை விட மிகப் பெரிய மாறுபட்ட வடிவிலும், அதிக எண்ணிக்கையிலும் இருக்கும். அதை வைத்து மாரடைப்பு நோய் ஏற்படுவதை முன் கூட்டியே அறிய முடியும்.

இதற்கான சோதனையை மாரடைப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 50 பேரிடம் நடத்திய சோதனையில் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இந்த சோதனை இன்னும் 2 ஆண்டுகளில் நடை முறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!