Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, December 31, 2011

மத்திய அரசின் புத்தாண்டு பரிசு !!

புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு அதிகரித்துள்ளது.

இழப்பை குறைக்கும் வகையில், உள்நாட்டில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு, குறைந்தது ரூ.2.10லிருந்து, அதிகபட்சமாக ரூ.2.13 வரை அதிகரிக்க, எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றபடி, ஒவ்வொரு மாதமும், முதல் தேதியும், 15ம் தேதியும், பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் உரிமை, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு, நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் விலை உயர்வை அறிவிப்பது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இருக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே, விலை உயர்வு அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், அரசியல் ரீதியான ஒப்புதலையும் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்தன.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!