Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, December 12, 2011

ஆந்திரத்திலிருந்து ஓட்டமெடுத்த அனுஷ்கா !!

நடிகை தமன்னா எப்படி தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஆந்திராவுக்கு ஓடினாரோ... அதேபோல நடிகை அனுஷ்கா ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஓடி வந்திருக்கிறார்.

தமன்னா விவகாரத்தில் மர்ம முடிச்சு பெரிதாக இல்லை; ஆனால் அனுஷ்கா விவகாரத்தில் அவிழாத மர்ம முடிச்சு இருப்பதாக ஆந்திர திரையுலகம் கூறுகிறது. 2012 முழுக்க நான் தமிழில் மட்டுமே நடிக்கணும். ஆந்திரா வேணாம். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க என்று தனது மேனேஜரிடம் கூறியிருந்தாராம் அனுஷ்கா. அதன்படி பல்வேறு தமிழ் படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.

அனுஷ்கா தமிழுக்கு ஓடி வந்த விவகாரத்திற்கு பின்னால் இருக்கிற காரணத்தையும், சமீபத்தில் அவர் வீட்டில் நடந்த இன்கம்டாக்ஸ் ரெய்டுக்கும் முடிச்சு போடுகிறார்கள் விவரமறிந்தவர்கள். மிகப்பெரிய அரசியல்வாதி ஒருவரின் தூண்டுதலின்படிதான் இந்த ரெய்டு நடந்ததாம். அவர் ஆந்திராக்காரர் என்பதால்தான் பொண்ணு தமிழ்நாட்டு எல்லையிலேயே தஞ்சம் புகுந்திருக்கிறார் என்கிறார்கள் அவர்கள். சிக்கல் என்னவாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் ஓராண்டு கொண்டாட்டம்தான்.

2 comments :

புயல் தமிழ்நாட்டில மையம் கொண்டிருச்சு போலிருக்கே...

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!