Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, December 20, 2011

சீண்டி பார்க்கிறார்கள் சீக்கிரம் முடிவு கட்டுவேன்! வடிவேல்!!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார் நடிகர் வடிவேலு.

இந்நிலையில் அகில உலக அரிமா சங்க மாவட்ட 324 பி3ன் மண்டல எழுச்சி மாநாடு, மதுரை மாவட்டம் வரிச்சியூர் அருகே உள்ள பாத்திமா மைக்கேல் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் வடிவேலு பேசியதாவது, நீண்டநாட்களுக்கு பிறகு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தேன். மற்றபடி யாருக்கும் பயந்து இந்த முடிவை எடுக்கவில்லை.

மதுரையில் பிறந்துவிட்டு இப்படி சீரழிகிறாயே என்று பலரும் கேட்டனர். சினிமா படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து சிரிக்க வைத்தாலும், எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கையும் உண்டு. சும்மா இருந்த என்னை சிலர் சீண்டிவிட்டனர். வடிவேலு கொலை செய்தான் என்றும், கொள்ளையடித்தான் என்றும் வீணாக அவதூறு பரப்புகிறார்கள். இந்த எல்லா பிரச்சனையும் சீக்கிரத்தில் முடிவு கட்டுவேன் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!