Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, December 17, 2011

தண்ணீரை விட்டு மற்றதை (திரை நாயகிகள்) தாராளாமாக தரும் கேரளா?

"வேட்டை" படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியை செம்புலி ஜெகனும், மாடல் ரம்யாவும் தொகுத்து வழங்கினர்.

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த "வேட்டை" பட ஹீரோயின் அமலா பாலை, மேடைக்கு வருமாறு ஜெகன் அழைத்தார். மேடைக்கு அமலா பால் வந்து கொண்டிருக்க... சந்தில் சிந்து பாடும் விதமாக ஜெகன் தன் வழக்கமான பாணியில் கிண்டலை அவிழ்த்து விட்டார். அமலா வரும் போது ஜெகன் " "கேரளாவில் இருந்து தண்ணி கேட்டா கொடுக்க மாட்டேங்குறாங்க, ஆனா அமலா பால் போன்ற நிறைய அழகான பொண்ணுங்கள மட்டும் அனுப்புறாங்க" அப்படின்னு கிண்டலாக சொல்ல, அதை கண்டும் காணாமல் இருந்து விட்டார் அமலா பால்.

அதோடு நிறுத்தினாரா ஜெகன் , மீண்டும் அமலாபாலை பார்த்து நாங்கள் எல்லாம் உங்களுக்கு தண்ணி கொடுத்து, டீக்கடைக்காரங்க டீ போட பால் கொடுத்து வியாபாரத்துக்கு உதவுகிறோம், ஆனால் நீங்கள் தண்ணீர் தர மாட்டேங்குறீங்க என்றார். அதுவரை அமைதியாகவே மேடையில் அமர்ந்திருந்த அமலா பால், நான் இந்த படத்தில் நடித்திருக்கிற செலபிரிட்டி, அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன், நீங்கள் பிரஸ் மீட்டில் கேள்வி கேட்கிற மாதிரி கேட்கிறீர்களே என்றார். அவருக்கு சப்போர்ட்டாக பேசிய ரம்யா : "ஜெகன் அவுங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா இல்லையா என்றார்". பின்னர் ஒரு வழியாக நிகழ்ச்சியும் நடந்தது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!