Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, July 23, 2012

பாதுகாப்பற்ற பாலஸ்தீனை விட்டு வெளியேறும் மக்கள்!

கெய்ரோ: எவ்வித ஆவணங்களும் இல்லாமல் வருகை தரும் ஃபலஸ்தீன் மக்கள் எகிப்தில் நுழையவும், தங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திங்கள் கிழமை காலை முதலே ஏர்போர்ட்டுகளிலும், இதர இடங்களிலும் ஃபலஸ்தீன் மக்கள் விசா இல்லாமலேயே நுழைய துவங்கியுள்ளனர். கெய்ரோ ஏர்போர்டின் பாதுகாப்பு பிரிவு இத்தகவலை தெரிவித்துள்ளது.

வெறும் பாஸ்போர்ட் மட்டுமே பரிசோதித்து அதில் ஸ்டாம்ப் செய்யப்படுகிறது., விசா பிரச்சனையின் காரணமாக முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களும் புதிய சட்டத்தின் அடிப்படையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் கொடூர தாக்குதலால் மக்கள் தினம் ஃபலஸ்தீனை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்.

சொந்த மண்ணை விட்டு செல்ல என்ன தவறு செய்தார்கள் ஃபலஸ்தீனியர்கள், நாடு இல்லாமல் வந்தவர்களுக்கு (இஸ்ரேளிகளுக்கு)தங்க இடம் கொடுத்தது மட்டும்தான் இவர்கள் தவறு.

முன்பு இஸ்ரேல் என்கிற நாடே கிடையாது. 1963 முன்புள்ள உலக வரைபடத்தை பார்த்தவர்களுக்கு புரியும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!