Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, December 25, 2012

பஸ்ஸில் மட்டும்தானா பாலியல்!?

புதுடில்லி: பெண்களுக்கு எதிராக வன்முறைகள், பாலியல் பலாத்கார குற்றங்கள் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பெண்களுக்கு எதிராக கற்பழிப்பு மற்றும் பாலியல் தொல்லைகள் போன்ற சம்பவங்கள் ஓடும் ரயில்களில் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள ‌தகவலில், இந்தியா முழுவதும் 8000-த்திற்கும் மேற்பட்ட ரயில் நிலயங்கள் உள்ளன. மிகவும் முக்கிய ரயில்நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 3,500 எக்ஸ்பிரஸ் ரயில்கள், உள்ளூர் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. ரயில்களில் பயணிப்போரில் பெண்களுக்கு பாதுகாப்பு வசதிகள் போதிய அளவில் இல்லையென புகார் எழுந்துள்ளது.

அதன்படி கிடைத்த புள்ளி விவரப்படி கடந்த ஆண்டு ரயில்களில் பயணிக்கும் பெண்களிடம் சிலுமிஷம் செய்வது , பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது, மற்றும் கற்பழி்த்து கொலை செய்தது என 712 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2010-ம் ஆண்டில் 501 ஆக இருந்தது.

இதில் கடந்த 2011-ம் ஆண்டில் 15 கற்பழிப்பு வழக்குகள், பெண்களிடம் சிலுமிஷம் மற்றும் தவறாக நடக்க முயன்றதாக 362 வழக்குகளும், கடந்த 2010-ம் ஆண்டில் 10 கற்பழிப்பு வழக்குகளும், 352 ஈவ் டீசிங் வழக்குகளும் பதிவாகியுள்ளன.

2 comments :

இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா!

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!