Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, December 2, 2012

முதலிடம் வகிக்கும் தமிழகம் குஜராத்?

புதுடெல்லி:. மகளிருக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்குகள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது இடத்தை மோடி ஆளும் குஜராத் பிடித்துள்ளது.

ஒரு பெண் முதல்வராக உள்ள தமிழகத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் கிருஷ்ணா தீரத் கூறியது: தேசிய குற்றப் பதிவேடு ஆணையகத்தின் புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவில் 2011ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக 9,431 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் அதிகளவாக 3,983 வழக்குகள் பதிவாகியுள்ளன. குஜராத்தில் 3,266 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 1,661 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, 36 புகார்களை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரித்து வருகிறது. இவற்றில், 21 சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்றவை என்றார் அவர். (மோடியோ முதல் மாநிலம் ஆக்குவேன் என்று சொல்லி மகளிருக்கு எதிராக அரவேக்காடு அறிக்கைகளை விட்டு மாட்டிக்கொண்டார்., ஆட்சியில் அமர்ந்த ஜெயாவோ தமிழகத்தை குஜராத்தை போல் மாற்றுவேன் என்று அடாவடி ஆட்சி நடத்துகிறார் மோ(கே)டியைப்போல். அயோக்கியத்தனம் செய்யவே அரசியலுக்கு வந்தவர்கள் இருவரும்).

2 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!