Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, December 1, 2012

ஐயோ! அதுவா!! ச்சீய் ச்சீய் உ(ணவு)வே!!!

கடல் வாழ் உயிரினம்!! இதில் ஏராளமான் ஒமேகா-3- கொழுப்பு அமிலம் (Omega-3 Fatty Acids) உள்ளதால், இது மூளைக்கும், இதயத்திற்கும் நல்லது. இதனால் நினைவுத் திறன் அதிகரிக்கும். நினைவு மறதி நோய் (Dementia and Alzheimer's Disease) பாதிக்காது. இப்படி கடல் மீனை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், குழந்தைகளுக்கு பலவகை பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறதாம். இதுலுள்ள DHA (Docosahexaenoic Acid) என்ற வேதிப்பொருள் அவர்களின் அதிகமான் செயல்திறனையும் (Hyperactivity), நடத்தை கோளாறுகளையும் (Behavioural Problems) சரிசெய்வதாகவும், மேலும் அவர்களின் கல்வி தொடர்பான திறமைகளை அதிகரிப்பதாகவும், கவன ஈர்ப்புத் திறன் கூடுவதாகவும் ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கடல் உணவுப்பொருள்கள் இதயத்தின் நலத்துக்கும், அதனைப் பராமரிக்கவும் மிகவும் உதவுவதாக பல ஆதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரம் ஒரு முறை மீன் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு வருவது பாதியாக குறைக்கப்படுகிறதாம். பாரம்பரியமாக மீனை தொடர்ந்து உண்ணும் இந்நூட் இன மக்கள் மற்றும் ஜப்பானியர்களுக்கு இதயப் பிரச்சினைகள் மற்றும் மாரடைப்பு போன்றவை மிகக் குறைவாகவே வருகிறதாம். மீன் சாப்பிடுபவர்கள் மற்றும் மீன் சாப்பிடாதவர்களிடையே கணக்கெடுப்பு உலகம் முழுவதும் நடத்தியதில்தான் இந்த தகவல்கள் கிடைத்தன. மேலும் அமெரிக்க வாழ் செவிலிகளிடம் மீன் மற்றும் கடல் உணவு உண்ணுவது தொடர்பாக தகவல் சேகரித்ததில் அவர்களுக்கு இதயப் பிரச்சினை 50%, சர்க்கரை நோயின் வாய்ப்பு 60% குறைந்தது தெரிய வந்தது.

மாதம் மூன்று முறை மீன்/கடல் உணவு உண்டால் உங்களின் இதயத்திற்கு, சிக்கல் வராதாம். மாரடைப்பு, ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாமாம். மீன் இரத்தக் குழாய்களில் இரத்தம் கட்டியாகி அடைப்பதை தவிர்க்கிறது. அதிக கொழுப்பு உள்ள உணவு மீனின் எண்ணெயிலுள்ள EPA, (Eicosapentaenoic Acid (EPA) and Docosahexaenoic Acid (DHA) & இயற்கையான ஒமேகா-3 - கொழுப்பு அமிலம் போன்றவை தற்காப்பு சக்தியை அதிகரிக்கிறது.இவர்களுக்கு DHA என்பது பொதுவாக கருவில் வளரும் குழந்தையின் துவக்க காலத்தில் மூளை மற்றும் கண்ணின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இது மூளை வளரும்போது தகவல்களுக்கு பதிலிறுக்க மூளையின் செல்களைத் தூண்டுகிறது. கருவுற்றிருக்கும் தாய் மற்றும் குழந்தை பெற்ற தாய்க்கும் மிகவும் நெருங்கிய நன்மை செய்யும் நண்பன்.

தாய்ப்பாலில் DHA மற்றும் அரக்டானிக் அமிலம் (Arachidonic Acid) இருப்பதால், தாயப்பால் குடித்த குழந்தைகளின் கண்பார்வை நன்றாகவும், மூளைத்திறன் அதிகமாகவும் இருக்கிறது. DHA மகப்பேறு காலத்தில் உண்டாகும் மனவழுத்தத்தைக் குறைக்கிறது. பொதுவாக கடல் மீன் உண்பதன் மூலம் மன இறுக்க நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

சில நாடுகளில் இந்த DHA மற்றும் ஒமேகா-3 -கொழுப்பு அமிலம் குறைவால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப் படுகின்றனர். இதற்கு நிகரான வெளி உணவையோ/ மாற்றுப் பொருள்களையோ கொடுப்பது சிரமம். முதுமைக் காலத்தில் நமக்கு ஏற்படும் நினைவு மறதி நோய் மற்றும் மூளையின் செயல்பாட்டுத் திறன் (Dementia and Alzheimer's Disease) பிரச்சினைகள் வரும் அளவை கடல் மீன்/உணவு பெருமளவு குறைக்கிறது. உடல் பருமன் வராமல் தடுக்கிறது.

கண்ணின் பல பிரச்சினைகளுக்கு கடல் மீன் உணவு நல்லது. புற்று நோய் வரும் அபாயத்தை தவிர்க்கிறது. இரண்டாம் வகை சர்க்கரை நோயும் இதனால் குறைகிறது. இரத்தக் குழாயினுள் இரத்தம் உறைதலை, இரத்தக் கட்டியைத் தவிர்க்கிறது. மூட்டு வலி மற்றும் கீல்வாத வலியைக் குறைக்கிறது. நுரையீரலைக் கண்காணித்து, பாதுகாத்து, சுவாசம் தொடர்பான சங்கடங்கள் வராமல் கவனித்துக் கொள்கிறது.

ஒமேகா-3 -கொழுப்புகள் (Omega-3 Fats) நமது தோலை பளபளவென மினுக்கும் அழகுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. தோல் நோய்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்கிறது. முதுமைக் காலத்தில் கொலாஜென் (Collagen) சிதைவால் ஏற்படும் தோல் சுருக்கத்தையும் குறைக்கிறதாம். பொதுவாக ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் சீரணப் பிரச்சினைகளைத் தவிர்க்கிறது. உடல் வளர்ச்சிக்கு பிரமாதாய் உதவுகிறது.

குறிப்பு: இத்தனை பயன்களும் குழம்பு மீனால்தான். வருக்கும் மீனில் கொஞ்சம் குறையும். வறுத்த மீனில் கொலஸ்டிரால் வரும்.

1 comments :

பயனுள்ள மருத்துவ தகவல்கள்

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!