Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, October 22, 2012

சிக்கிய சின்மயிடம் சில்மிசத்தில் இடுபட்டவர்!

டிவிட்டர் இணையதளத்தில் தன்னைப் பற்றி தரக்குறைவான வகையில் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்றனர் என்று திரைப்பட பின்னணிப் பாடகி சின்மயி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார்.

மேலும் அந்த புகாரில், ட்விட்டர் இணையதளத்தில் தன்னைப் பற்றி சிலர் ஆபாசமாக தகவல்கள் பரப்பி வருகின்றனர், இது போன்ற கருத்துகளைக் கூறுபவர்களை ட்விட்டரில் இருந்து துண்டித்தாலும், மீண்டும் வேறு பெயர்களில் ஆபாச கருத்துகளைக் கூறுகின்றனர். மேலும் அவர்கள் ஆபாச படங்களையும் அனுப்புகின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கும்படி அவர் புகாரில் வலியுறுத்தியிருந்தார். இந்த புகாரை விசாரிக்குமாறு பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ், சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

சைபர் குற்றப்பிரிவு போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். இதில் சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் சரவணக்குமார் உள்பட 6 பேர்தான் சின்மயிக்கு இணையதளத்தில் தொந்தரவு கொடுப்பது என தெரியவந்தது. இதையடுத்து சரவணக்குமாரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!