Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, August 4, 2012

ஆசை நாயகியுடன் ஓடியதால் குப்பிற படுத்து குமுறும் மடாதிபதி!?

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் (நித்தி ஆசை நாயகி ரஞ்சிதாவுடன்) திபெத்தில் உள்ள கைலாய மலைக்கு புறப்பட்டு சென்றார். நேபாளம் வழியாக அவர் சென்றதாக கூறப்படுகிறது., இன்று மதுரையில் ஆதீனம் அருணகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் நித்தி -ரஞ்சிதா கைலாய மலை பயணம் குறித்து கேட்டபோது, ‘’ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா சென்றது எனக்கு தெரியாது. அவர்களது பாஸ்போர்ட் சிக்கிய விவகாரம் செய்திகள் மூலம் தெரிந்துகொண்டு வருத்தப்பட்டேன்.

ரஞ்சிதாவுடன் செல்வது பற்றி நித்தியானந்தா என்னிடம் கூறவில்லை. இதனால் எனக்கு மிகுந்த வருத்தம். அவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று தெரியவில்லை’’ என்று கூறினார்.

அவர் மேலும், ‘’மதுரை ஆதீன மடத்து சொத்துக்களை மீட்டு தருவதாக கூறினார் நித்தியானந்தா. அதற்காகத்தான் அவரை இளைய ஆதீனமாக அறிவித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து மடத்துக்கு எதிரான செய்கைகளில் ஈடுபட்டு வருகிறார்’’ என்று புலம்பினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!