Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, August 27, 2012

பென்ஷனுக்காக பொட்டிலக்கும் பெண்கள்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தகுதியில்லாத நபர்கள் விதவைகள் பென்ஷன் பெற்றுள்ளனர். இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல போலி பென்ஷன்தாரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

திருமணமான பெண்கள் 131 பேர் தங்கள் கணவர் இறந்துவிட்டதாக போலியான தகவல்களை கொடுத்து மாதம் 300 ரூபாய் பென்ஷன் பெற்று வந்துள்ளனர்.

மேலும் விதவை பென்ஷன் பட்டியலில் உள்ள 299 பேர் இறந்த பிறகும், அவர்களின் பெயரில் மாதந்தோறும் பென்ஷன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகையினை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெற்று வந்துள்ளதை இப்போது அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து விதவை பென்ஷன்தாரர்களை முறைப் படுத்த சமூக நலத்துறை தீவிர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

1 comments :

வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!