Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, August 31, 2012

குறையை குறைப்பதால் குற்றம் ஏதுமில்லையே!

சிலர் எதற்கெடுத்தாலும் பிறரை குறை சொல்லுவதியே வழக்கமாக கொண்டிருப்பர் எடுத்துக்காட்டாக எனது பக்கத்து வீட்டு நபர்களையோ அல்லது எனது ஆசிரியருக்கு பாடம் நடத்தவே தெரியல..இரு பெண்கள் சந்தித்துக்கொண்டால், அவங்க குடும்பமே அப்படித்தான் ... என குறை சொல்லி கொண்டிருப்பதே வழக்கமாக கொண்டிருப்பர்.

நாமும் பல நேரங்களில் யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருப்போம் இரண்டு மூன்று பெண்கள் கூடி பேச தொடங்கினாலே அடுத்த வீட்டு கதையைத்தான் அசைப்போட்டு ஐயோ அவள் அப்படி ...அட இவன் இப்படி...என்று வாய்க்கு வந்தபடி குறை சொல்லிவிடுகிறோம் அடுத்தகணமே நாம் குறை சொன்ன நபர் வந்துவிட்டால் வாங்க வாங்க...எப்படி நல்லா இருக்கியளா? என்ன உடம்பு ரொம்ப இளைச்சு போச்சு? இந்த பக்கமே வர மாட்டேன்கிரீங்க? என்று புன்னகை பொங்க அன்பு வார்த்தைகளை அப்படியே அள்ளி வீசிடுவோம்..

யாரிடம் தான் குறை இல்லை யாரிடம்தான் பலவீனம் இல்லை? நான் மட்டும் ரொம்ப யோக்கியமா?நான் தவறே செய்வதில்லையா? என்று திறந்த மனதுடன் நம்மை நாமே கேட்டு பாப்போம். அடுத்த மனிதர்களிடம் நல்ல குணங்கள் ஏராளமாக காணப்படுகின்றன அவற்றைப்பற்றி தாராளமாகவும் ஏராளமாகவும் பேசுவோம். அடுத்தவரின் நல்ல குணங்களை நம் கண்கள் நன்றாக பார்க்கட்டும் அடுத்தவரை பற்றி நல்லது பேசுவதால் நாம் எதையும் இழந்து விடப்போவது இல்லை பிறர் நம்மை வெறுத்தாலும் அவர்களை குறை சொல்வதை மனதார மன்னித்து ஏற்றுகொல்வதே சிறந்தது. *பல நல்ல மனிதர்கள் அதைதான் செய்தார்கள்.

அடுத்தவர்கள் விஷயத்தை நொண்டி நொங்கு எடுப்பதை விட்டுவிட்டு நம் வேலைகளை கவனம் செலுத்தினால் எவ்வளவு பயனளிக்கும், வீண் சண்டையிலிருந்தும் தப்பிக்கலாம் செய்யலாமா....

1 comments :

உண்மைதான்... நல்ல பகிர்வு,,

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!