Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, August 23, 2012

ஆசிரியையின் கவர்ச்சியும் மாணவனின் மிரச்சியும்!!

இன்று இந்தியா முழுவதும் ஒரு விஷயம் பரவலாக்கப்பட்டு வருகிறது அது என்னவென்றால் பள்ளி ஆசிரியைகள் தங்களது ஆடையை கண்ணியமிக்கதாக சரியாக போட்டுவரவேண்டும். உடலை அரைகுறையாக காட்டிக்கொண்டு வரக்கூடாது முடிந்தால் ஸ்கர்ட் போன்றவைகளை தவிர்த்து விட்டு சேலை போன்றவைகளை கட்டிக்கொண்டு வரவேண்டும் என்கின்ற இந்த விஷயம் நாம் அடிக்கடி கேள்விப்பட்டு வருகிறோம்.

ஏன்? இப்படி. எதற்காக இந்த விஷயம் பிரபுலப்படுத்தப்படுகிறது. என்னவென்றால் பல கல்விக் கூடங்களில் ஆசிரியைகளின் அரை குறை ஆடைகளால் பாடம் கற்க வந்த பள்ளி மாணவர்கள் பாடத்தை விட்டு விட்டு ஆசிரியைகளின் உடல் அழகை படிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதன் காரணத்தால் சில இடங்களில் ஆசிரியைகள் மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமும் நாம் அறிவோம்.

இன்னும் சில இடங்களில் ஆசிரியைகள் தங்களிடம் பாடம் கற்க வந்த மாணவர்களை அவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் பாலியல் தொடர்பு கொண்ட செய்திகளும் நமக்கு தெரியும். நியூயார்க்கில் பதிமூன்று வயது மாணவர்களுடன் ஒன்பது வருடம் உடல் உறவு கொண்ட லீனா என்ற இந்திய ஆசிரியைக்கு அந்த நாட்டு அரசு பதினான்கு வருடம் கடுங்காவல் தண்டனை கொடுத்துள்ளது.

மேற்குலகம் இன்றுவரை இஸ்லாம் பெண்களை பர்தாவால் அடிமைப்படுத்தி உள்ளது என்கின்ற கூப்பாட்டோடு அதை தடை செய்யும் செயலை பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தி உள்ளது. மீறி பர்தா அணிந்தால் அவர்களுக்கு கடுமையான சட்டத்தின் மூலம் தண்டனை கொடுத்து உள்ளது. ஆனால் அதே மேற்குலகம் பெண்களின் சுதந்திரம் என்கின்ற போர்வையில் தனது மனைவியையும், தான்பெற்ற பெண் பிள்ளைகளையும், தனது சமூக மக்களையும் அரைகுறை ஆடைகளால் பார்த்து பார்த்து மனதுக்குள் ஆனந்தம் அடைந்தது. இதைவிட கொஞ்சம் மேலேபோய் அவர்களுக்கு வேலைவாய்ப்பு என்கின்ற போர்வையில் அவர்களின் கற்ப்பு சூறையாடப்பட்டு வருகிறது. அமெரிக்க இராணுவத்தில் பணிபுரியும் பல பெண்களின் கர்ப்பை அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளே சூறையாடிய சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே.

ஆகமொத்தம் அந்நிய பெண்களை அவர்களின் உடல் அழகை காணவேண்டும் என்கின்ற வக்கிரக்கப் புத்தியுடன் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன. அதனால் தான் பாலியல் வன்முறைகள் மேலை நாடுகளில் அன்றாட நிகழ்ச்சியாக நடந்து வருகிறது. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் நடத்தும் ஓரினச்சேர்க்கையை அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் .

என்ன காரணம் இறைவன் பெண்களின் உடலில் ஒரு கவர்ச்சியை இயற்கையாகவே கொடுத்து உள்ளான். அதனால் தான் அவர்களைப் படைத்த இறைவன் அவர்களுக்கு அவர்களின் உடல் அழகை யாருக்காக அவர்கள் காட்டவேண்டும் என்கின்ற சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுத்து உள்ளான். தன்னுடைய கணவருக்காக காட்டவேண்டிய தங்களது பொன்னான உடல் அழகை, பெண் கண்ணியத்தை, கர்ப்பை அந்நிய ஓநாய்களுக்கு காட்டவேண்டாம் என அறிவுறுத்துகிறது.

மிகவும் இறுக்கமான ஆடைகளால் தங்களது உடல் அழகு வெளியில் தெரியும்படி நடக்க வேண்டாம் ஓசை கேட்கும்படி தங்களது கால்களில் சலங்கையை கட்டிக்கொண்டு திரியவேண்டாம். இதன்மூலம் அந்நிய ஆடவரின் மனதில் வீணான என்னத்தை விதைக்கவேண்டாம். பெண்கள் தங்களது ஆடைகளால் தங்களது உடலை அழகாக மறைக்கவேண்டும் மேலும் தங்களது முந்தானைகளால் தங்களது மேல் முகத்தை மூட வேண்டும் அந்நிய ஆடவர்கள் தங்களது பக்கம் திரும்பாமல் தங்களது குரலை குளைத்துப் பேசவேண்டாம் என்கின்ற அன்புக் கட்டளையை இஸ்லாம் குடும்ப பெண்களுக்கு கற்றுக் கொடுக்கிறது.

அதே நேரம் ஆண்களையும் இஸ்லாம் செதுக்குகிறது அன்னியப் பென்களைப் பார்த்தால் உங்களது பார்வையை கீழே தாழ்த்திக் கொள்ளுங்கள், நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்களோ அவ்வாறுதான் உங்களுக்கு மனைவி கிடைப்பாள் எனவே உங்களை ஈமானுடன் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் கண்ணியத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறது.

இந்த பெண்களுக்கான கண்ணியத்தை ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே இஸ்லாம் மனிதர்களுக்கு கொடுத்து உள்ளது. அதனால்தான் இஸ்லாமிய உலகில் பெண் சிசுக்கொலை கிடையாது கற்பழிப்பு கிடையாது எனவே இஸ்லாம் கூறும் இந்த பர்தா என்கின்ற பெண்களின் பாதுகாப்பு கவசத்தை முஸ்லிம்களுக்கு மட்டும் என்று எடுத்துக்கொள்ளாமல் அனைத்து சமுதாய பெண் மக்களும் எடுத்துக்கொண்டால் வரக்கூடிய சமுதாயம் பெண்களைப் பற்றிய கண்ணியத்தை தெரிந்து அவர்களிடம் பழகுவார்கள் பலவிதமான தவறுகள் இல்லாத சமுதாயமாக மாறுவார்கள் என்பதை புரிந்து கொண்டு நடக்கவேண்டும்.

2 comments :

நியூயார்க்கில் உள்ள மான்டிசோரி பள்ளியின் முன்னாள் முதல்வரான 46 வயது இந்திய அமெரிக்க ஆசிரியை, 13 வயது மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
அந்த ஆசிரியையின் பெயர் லீனா சின்ஹா. இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இவரது பெற்றோர் தொடங்கி நடத்தி வந்த பள்ளியில் இவர் அப்போது முதல்வராக இருந்து வந்தார். அப்போது 1996ம் ஆண்டு இவர் 13 வயது பையனுடன் முதலில் வாய் வழி உறவை வைத்திருந்தார். பின்னர் அந்தப் பையனை தொடர்ந்து பாலியல் ரீதியாக பயன்படுத்தி வந்தார். அந்தப் பையன் நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி என்று போகும் வரை விடாமல் தொடர்ந்து அவனைப் பயன்படுத்தினார்.

இஸ்லாம் பர்தா முறையை போலவே அனைத்து சர்ச்சர்ச்சைகளுக்கும் தீர்வை சொல்லி இருக்கிறது. உங்கள் இஸ்லாமிய நண்பர்களிடம் குர்ஆன் தமிழாக்கம் கேட்டு வாங்கி ஒருமுறை முழுமையாக படித்து பார்பீராயின் வாழ்க்கைமுறை முழுவதற்கும் அதில் தீர்வை காணலாம்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!