Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, August 16, 2012

வழக்கிலிருந்து விடுபட வழக்குரைஞரை நடுநடுங்க வைத்த ஜெயா!?

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க 2003 நவம்பர் 18-ம் தேதி பெங்களூரில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அன்றுமுதல் இந்த வழக்கில் அரசுத் தரப்பு மூத்த வழக்குரைஞராக பி.வி.ஆச்சார்யா செயல்பட்டு வந்தார். இந்த வழக்கிலிருந்து அவரை வெளியேற்ற (ஜெயா) அரசியல் ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அரசு மூத்த வழக்குரைஞர் பதவியுடன், கர்நாடக மாநில அரசு தலைமை வழக்குரைஞராகவும் பணியாற்றினார். இதை ஆட்சேபித்து சிலர் நீதிமன்றங்களில் முறையிட்டனர். இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு மூத்த வழக்குரைஞராக தொடர விரும்புவதால், அரசு தலைமை வழக்குரைஞர் பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தார்.

தனது பதவியை ராஜினாமாச் செய்தது குறித்து பி.வி.ஆச்சார்யா கூறியது: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் அரசுத் தரப்பு மூத்த வழக்குரைஞர் பதவியை ராஜிநாமா செய்து கடிதம் அளித்துள்ளேன்.

இந்த வழக்கு விசாரணை அவசியமில்லாமல் காலதாமதமாகி வருகிறது. இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது, அத்துடன் தன்னையும் தன் குடும்பத்தாரையும் மிரட்டினார்கள்.

மேலும், இந்தப் பதவியிலிருந்து என்னை நீக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை என் மனதை ஆழமாகக் காயப்படுத்தியது. என் பொறுப்புகளில் இருந்து நான் விடுபட்டுள்ளதால் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

7 ஆண்டுகளுக்கு முன்பு அரசுத் தரப்பு மூத்த வழக்குரைஞர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். 6 மாதங்கள் அல்லது ஓராண்டில் வழக்கு முடிவடையும் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால், 7 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், வழக்கு விசாரணை முடிவடையவில்லை.

தற்போதைய நிலையில், இந்தப் பதவியால் ஏற்படும் மன உளைச்சலை தாங்கும் ஆற்றல் எனக்கில்லை. மேலும், எனக்கு எதிராகப் பொய்யான புகார் அளித்து இந்தப் பதவியில் இருந்து என்னை நீக்க இதற்கு முன்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்தப் புகார் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தாலும், அதுபோன்ற சம்பவங்கள் என்னை மிகவும் காயப்படுத்தியது. மேலும், இதுபோன்ற முயற்சிகள் மனதளவில் வேதனையையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளன. எனவே, இந்தப் பதவியில் தொடர நான் விரும்பவில்லை என்றார் அவர்.

1 comments :

sudanira indiyavil padhitha perumakkal, nidimankal, ulaikkum pattli makkal ellorum cithikka vendum. namakku ennum pathu anndukaluku ranuva aatchi vendum. makkalal sudanthirama irkkamuyavittalum ulaikkum makalukku intha arasiyal kolaikarakalidamurundu vidudalai. 63 varada sundira indiyavil enna periya sadanaikal sendom. ennai madirin padipavilla manidanukku theridadukuda padithaperu makkalu theriavillai. arasu duraieilum epavavathu oru numashakar, sakayam ponravarkal ullanar. enaseivadhu, thalaivarkalaga parthu thirundavittal uulal oliyadhu. vendum ranuva atchi. jaihind.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!