Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, November 5, 2012

பெண்ணை மணந்து ஏமாற்றிய பிரமச்சாரி!?

டெல்லி: அறிவு ஜீவி என்ற பெயரில் அவ்வப்போது பெண்களை பற்றி கருத்துக்களை வெளியிடும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவரின் மனைவி பற்றி பேசிய பேச்சால் பல்வேறு கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார்.

இந் நிலையில் தேசிய மகளிர் ஆணையத் தலைவி பிர்காசிங் மோடியை குரங்குடன் ஒப்பிட்டு கடுமையாக சாடியுள்ளார்.

‘இஞ்சியின் மகிமை குரங்கிற்கு தெரியுமா?’ என்று பெண்களை பற்றி தரக்குறைவாக பேசிவரும் நரேந்திர மோடியை குரங்குடன் ஒப்பிட்டு அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர், பெண்களை இழிவுபடுத்தி பேசிவரும், அயோக்கியன் நரேந்திரமோடி மன்னிப்பு கேட்கும் வரை விடப்போதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மோடி மன்னிப்பு கேட்காவிட்டால், இந்த பிரச்சினையை குஜராத் மாநில பெண்களிடம் எடுத்துச் சென்று கடும் போராட்டத்தில் குதிப்போம், என்று எச்சரித்துள்ளார்.

மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவை “50 கோடி ரூபாய் காதலி” என்று, கொச்சைப்படுத்தி பேசிய நரேந்திரமோடி, பலரது கண்டனங்களுக்கும் ஆளாகி வருகிறார். காங்கிரஸ் அமைச்சரின் மனைவி குறித்து அவர் பேசியதை, காங்கிரஸ் கட்சிக்கு அப்பால், பலரும் கண்டித்து வருகின்றனர்.

திருமணம் செய்துக்கொள்ளாத “பிரமச்சாரி” என்று சொல்லிக்கொள்ளும் நரேந்திர மோடி, “யசோதா” என்ற பெண்ணை 1968ல் திருமணம் செய்து எமாற்றியுள்ளார் என்பது, அயோக்கிய மோடியின் அயோக்கியத்தனம் இப்போது தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்திய பெண்களின் ஊட்டச்சத்து குறைவிற்கு, அவர்கள் தங்கள் அழகை பேணுவது தான் காரணம், என்று கூறி பல்வேறு கண்டனங்களுக்கு ஆளானவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!