Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, April 29, 2013

கண்டதும் காதல் வலையில் வீழ்வது யார்?

நியூயார்க்:பெண்களை விட காதல் வசப்படுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எதிர் பால் இனத்தவரிடம் வெகு சீக்கிரம் வீழ்வது பெண்களை விட ஆண்களே முன்னிலை வகிக்கின்றனர். 48 சதவீதம் இளைஞர்கள் முதல் பார்வையிலேயே காதலில் வீழ்கின்றராம். ஆனால், பெண்களோ 28 சதவீதம் பேர் மட்டுமே முதல் பார்வையில் காதல் வசப்படுகின்றனர். புதிய நூற்றாண்டில் காதல் மற்றும் உறவுகள் குறித்து அறிவதற்காக நடத்தப்பட்ட ஆன்லைன் ஆய்வில் இந்த சுவராஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. புதிய தலைமுறையினரின் மாறிய பாலியல் அணுகுமுறையும் , உறவுகளும் அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தபப்ட்டது.10 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பாலியல், ஈர்ப்பு, இதர உடல்ரீதியான சிறப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 1300 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் சர்வேயில் பங்கேற்றவர்களிடம் அளிக்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற 74 சதவீதம் பேரும் தங்களின் இணையின் மீது திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தனர்.15 சதவீதம் பேர் சொந்த இணையை தவிர தவறான உறவையும் வைத்துள்ளனர். மூன்றில் ஒரு பகுதி ஆண்களும், 19 சதவீதம் பெண்களும் திருமணம் அல்லாத முறைகேடான உறவுகளில் விருப்பம் உள்ளவர்கள். கைகளை சேர்த்து பிடித்தல், செல்லப்பெயர் கூறி அழைத்தல், நான் உன்னை விரும்புகிறேன் என்று கூறுதல், முத்தமிடல் ஆகியன தனது இணையிடம் அன்பை வெளிப்படுத்த பெரும்பாலோர் கடைப்பிடிக்கும் வழிமுறைகளாம்.
தகவல் பரிமாற்றம் உறவை வலுப்படுத்துவதாகவும், இது குறையும் வேளையில் உறவு சீர்குலைவதாகவும் ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!