Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, April 21, 2013

குஜராத் மின்சார சாக் அடிக்கும் உண்மைகள்?

நாட்டிற்கு எல்லா மதங்களையும் அனுசரித்து வழிநடத்தகூடிய பிரதமர்தேவை. ஒரு மதத்தவரை ஏற்றியும் மற்ற மதத்தவரை தூற்றியும் இங்கு யாராலும் ஆட்சி செய்துவிட முடியாது. 

குஜராத்தில் வளர்சி என்பது பத்திரிக்கைகளில் மட்டுமே என்பதை மீண்டும் நிரூபிக்கும் ஆதாரம். மின்சார உற்பத்தியிலும் மக்களுக்கு வழங்குவதிலும் கேவலமான நிலை தான் குஜராத்தில். இருந்தும் இந்த செய்திகளை எல்லாம் திட்டமிட்டு மறைக்கும் மீடியாக்கள் மோடியை புகழ்வதை மட்டும் நிறுத்துவதாக இல்லை.இவர்கள் பொய்யை பரப்ப செலவழிக்கும் காலத்தை மோடி குஜராத்தில் செய்த இனப்படுகொளைகளில் கொல்லப்பட்ட மக்களின் தற்போதைய நிலையை மக்கள் மன்றத்தில் விளக்கினால் நன்றாக இருக்கும். ஆனாலும் நமது பத்திரிக்கைகள் என்றைக்கும் மக்கள் மன்றத்தில் உண்மையை பாரப்பப் போவதில்லை. காரணம் ஹிந்துத்துவ அரசியல்.

சிறுபான்மைமக்களை ஒடுக்கி சர்வாதிகார ஆட்சியை நிறுவிவிடலாம் என்று கனவுகாண்பவர்கள் எமர்ஜன்சி காலத்தில் இந்திராகாந்திக்கு ஏற்பட்டநிலையை சிந்தித்துபார்க்கவேண்டும். அரசியலில் சமரசம் செய்துகொள்வது என்பது சாதாரண விஷயமாகும்.ஆனால் மதசார்பற்ற நிலையை மட்டும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம். அதற்காக ஆட்சியை இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை. 

இந்நாட்டில் முஸ்லீம்களும் ஹிந்துக்களும் சம உரிமை உள்ளவர்கள். நாம் ஒற்றுமையாக வாழ்வதை அங்கிகரிக்கும் பிரதமர்தான் நமக்குதேவை.மதங்களுக்கிடையில் பிரிவினையை உண்டாக்கி அதில் குளிர்காய நினைக்கும் சக்திகளை மக்கள் ஒருநாள் துடைத்தெரிந்துவிடுவார்கள்." என்று வரலாற்று சிறப்புமிக்க கருத்துக்களை நிதீஷ்குமார் கூறியுள்ளார். 

ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டத்தில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சியின் நிலைபாட்டை விளக்கியும் மோடியின் பொய் பிரச்சாரங்களை கடுமையாக விமர்சித்தும் பேசிய விஷயங்கள் தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஆனால் தமிழக ஊடகங்களால் இது முற்றிலும் இருட்டடிப்பு செய்ய பட்டுள்ளது.

அவர் பேசியவற்றின் சாராம்சங்கள் இதோ: "பிகாரில் நான் ஆட்சிக்கு வந்தபோது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியும் இருந்தது. ஆனால் என்னுடைய கடின உழைப்பால் இன்று பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளேன்.ஆனால் ஊடகங்கள் அதனை பாராமுகமாக இருந்துவருகிறது. நான் (மோடியைபோல்)மாநிலத்தை முன்னேற்றிவிட்டேன் என்று சொல்லிவிட்டு நகரங்களில் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டிவிட்டு கிராமங்களை இருளடைய செய்துவிடவில்லை. 

முன்னேற்றம்,  என்பது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதாகும். அதனை செய்யாமல் கட்டிடங்களை எழுப்பி யாருக்கு என்னபயன்? இன்று (குஜராத்தில்)மின் உற்பத்தி செயலிழந்து போய்விட்டது. பலகிராமங்களில்அடிப்படை வசதியான தண்ணீர்வசதி இல்லை.பெரும்பாலான மக்கள் பசிபட்டினியில் வாடுகின்றனர். ஒரு மாநிலத்தில் தண்ணீர் மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளில் இவ்வளவு தட்டுப்பாடு இருக்குபோது அதனை எவ்வாறு முன்னேற்றமாநிலமாக அங்கிகரிக்க முடியும். இதுபோன்ற முன்னேற்றத்தைத்தான் நான் மோடியிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறாரா?. இந்த லச்சனத்தில்தான் தமிழகத்துக்கு மின்சாரம் தருவதாக தமிழக ஆட்டகாரியிடம் கேட்டார் அசிங்க பிடித்த நர மாமிச மோடி.

1 comments :

இந்தியாவில் பேணப்படும் "மனித உரிமைகள்" குறித்து, அமெரிக்காவில் வெளியிடப்பட்ட

"கன்ட்ரி ரிப்போர்ட்ஸ் ஆன் ஹியூமன் ரைட்ஸ் பிராக்டீஸஸ் ஃபார் 2012" என்ற ஆய்வறிக்கையில், குஜராத் "கலவரக் குற்றவாளிகளை" தண்டிக்கும் விஷயத்தில், இந்தியாவில் செயல்படும் புலனாய்வு அமைப்புக்கள் நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!