Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, April 15, 2013

பாலகர்களுக்கு பயிற்சி அளிக்கும் பரதேசிகள்!?

இருக்க இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்குவார்கள் என்பது இந்த கூட்டத்திற்கு மிக கட்சிதமாக பொருந்தும், இடம் கொடுத்ததால் வந்த வினை இருக்கும் நாட்டிற்கு எதிராக சதி செயலில் ஈடுபட எல்லாவித ராணுவ பயிற்சியும் கற்று கொடுக்கிறார்கள் இளம் சிறுவர்களுக்கு.  

R.S.S சாஹா பயிற்சி முகாம்களில் துப்பாக்கி பயிற்சி எடுப்பது குறித்து (சிறுவர்கள், பெரியவர்கள் வயது வித்தியாசமின்றி )பத்திரிக்கைகளில் படங்களுடன் செய்திகள் வந்தது. இதற்கெல்லாம் சிகரம் வைச்ச மாதிரி, குஜராத கலவரத்தில் ராக்கெட் லாஞ்சர் டைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தியதாக தெஹல்கா விடியோவில் பேசினான் ஒரு எம்.எல்.ஏ. இப்போ போதாக்குறைக்கு RSS தீவிரவாத கும்பல் IT துறையில் வேறு நேரடியாக நுழைந்துவிட்டது.
இப்படி ஒரு அதி பயங்கரவாத கும்பாலா இருந்தாக் கூட இவனுக்கு இந்த அரசு எல்லா பாதுகாப்பும் வழங்கும். ஏன்னா இந்த அரசே ஒரு பார்ப்பனிய அரசுதான். இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்க சில பார்ப்பன எதிர்ப்பாளர்கள். அவிங்கள் நினைச்சாதான் பாவமா இருக்கு.

பார்ப்பினியம் தெளிவாக உள்ளது, இந்த அரசாங்க அமைப்பை நம்பி தனது செயல்பாடுகள் இல்லை என்பதில். மாறாக இந்த அரசின் இயல்பில்தான் தனது பலத்திற்கான ஊற்று மூலம் உள்ளது என்பது அதற்கு தெளிவாக தெரிந்த காரணத்தினால்தான் அரசாங்கம் அமைக்கும் விசயத்தில் ஏற்படும் பின்னடைவுகளை அது பொருட்படுத்துவதில்லை.

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் இந்தியாவில் பார்ப்னியத்தை வீதிகளில் 
வைத்து உதைக்காத (சந்தித்து அடிக்காத) வரை பார்ப்பனியத்துக்கு கவலையில்ல.

இந்தியா எதிர்நோக்கும் அபாயம் (சீனா, ரஷ்ய, பாகிஸ்தான்) அண்டை நாடுகளல்ல இந்த ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகளால்தான் என்பது எப்போது விளங்கப்போகிறதோ அன்றுதான் வல்லரசாகும், அதுவரை புள்ளரசுதான்.

1 comments :

இந்த துப்பாக்கிகலெல்லாம் இவர்களிடம் எதற்காக நாட்டை காப்பாற்றவா?நிட்சயம் கிடையாது.தலித் முஸ்லிம் கிறிஸ்துவர் மற்றும் நாட்டின் அப்பாவி மக்களை கொள்வதற்காக. அன்று கையில் லத்தியை வைதிருக்கும் போது காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஹிந்துத்துவ பயங்கரவாதம் .இன்று கையில் துப்பாக்கியை வைதுக்கொண்டு வெடி குண்டுகள் மூலம் அப்பாவி மக்களை கொன்று வருகிறார்கள் .3% பிராமணர்களால் கட்டுப்படுத்தப் படும் ஹிந்துத்துவ தீவிரவாதத்தின் பரிணாம வளர்சி

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!