Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, February 21, 2013

பாசிஸ்டுகளிடம் மண்டியிட்ட உள்துறை?

புதுடெல்லி: தற்போது இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி இரத்த ஆறை ஓடச் செய்த சங்க்பரிவாரத்தின் உண்மையான முகத்தை திறந்த காட்டும் விதமாக நடந்து விசாரணையில் கிடைத்த தகவல்களின் படி ஜெய்ப்பூர் சிந்தனை அமர்வில் ஹிந்துத்துவா தீவிரவாதம் குறித்து பேசியதற்காக உள்துறை அமைச்சர் ஷிண்டே வருத்தம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் காவி பயங்கரவாதிகளுக்கு மிதவாத ஹிந்துத்துவாவை கடைப் பிடித்துவரும் காங்கிரஸ் அரசு மீண்டும் மண்டியிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத பயிற்சி அளிக்கும் முகாம்களை நடத்துவதாக ஷிண்டே கூறியது சங்க்பரிவாரத்திற்கு ரோஷத்தை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து ஷிண்டே, தனது அறிக்கையை வாபஸ் பெற்று மன்னிப்புக்கோரவேண்டும், இல்லையெனில் பாராளுமன்றத்தை முடக்குவோம் என்று பா.ஜ.க மிரட்டியது. கடந்த புதன்கிழமை ஷிண்டேயின் வீட்டை நோக்கி பா.ஜ.க தலைவர்கள் அடங்கிய குழு கண்டன ஊர்வலம் நடத்தியது.
இந்நிலையில், ஷிண்டே தனது ஹிந்துத்துவா தீவிரவாதம் குறித்து தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.ஜெய்ப்பூரில் கூறிய கருத்துக்கள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும், எந்த மதத்தையும் தீவிரவாதத்துடன் தொடர்புப்படுத்துவது தமது நோக்கமல்ல என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 
சங்க்பரிவார பாசிஸ்டுகள் தங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு நேர்மையாக பதிலளிக்கவோ அதனை சட்டரீதியாக எதிர்கொள்ளவோ துணிச்சல் இல்லாத கோழைகள் ஆவர். இதற்கு பதிலாக அரசை மிரட்டி காரியம் சாதிப்பதில் அவர்கள் கெட்டிக்காரர்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. (கூட்டு மனசாட்சியின் படி சங்க்பரிவாரை திருப்திப் படுத்த அப்பாவி அப்ஸல் குருவை தூக்கிலிட்டு படுகொலைச் செய்தது காங்கிரஸ் அரசு. )

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!