Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, February 20, 2013

இனப்படுகொலை, இன வாதத்தில் புத்தா?


கொழும்பு: இலங்கையில் முஸ்லிம்கள் உணவு பொருட்களில் ஹலால் முறையை ஒழிக்கவேண்டும் என்று அந்நாட்டின் புத்த தீவிரவாத அமைப்பான பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தலைநகரான கொழும்புவின் மகரகமாவில் புத்த தீவிரவாத அமைப்பான பொதுபலசேனாவின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பல்வேறு துவேச தீர்மானங்களை அவ்வமைப்பு நிறைவேற்றியுள்ளது.
வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கை பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்பப்படுவதை நிறுத்த வேண்டும், இலங்கையில் பல பிரச்சனைகளுக்கு முஸ்லிம்களின் உலமா சபைகளே காரணம் என்றும் எனவே உலமா சபையை தடைச்செய்யவேண்டும், போன்றவை அக்கூட்டத்தில் பேசப்பட்டுள்ளன.
முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அக்கூட்டத்தில் பேசிய தீவிரவாத புத்த சாமியார் ஒருவர் கூறியுள்ளார். மேலும் ஒருமாத காலத்திற்குள் இலங்கையில் உள்ள வெளிநாட்டு போதகர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!