Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, May 13, 2013

அக்கறை கொண்ட அரசா ஜெயா அரசு!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு அரசும் மக்களுக்கான நலத்திட்டம் தீட்டும் பொழுது அந்த திட்டம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் மனதில் கொண்டுதான் தீட்டப்பட வேண்டும். 

ஆனால், நகர்ப்புற ஓட்டுக்களை தக்கவைக்க குறுகிய கண்ணோட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஜெயாவின் கவர்ச்சி திட்டமான "ஒரு ரூபாய் இட்லி" திட்டம் மாநிலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நடைமுறைபடுத்தப்படுவதை பாராட்டும் சிலருக்கு என்ன வகையான மனப்போக்கு என்பது புரியவில்லை. உண்மையாக மக்களின் மேல் அக்கறை கொண்ட அரசாக இருந்தால் இந்த திட்டத்தை முதலில் விவசாயம் இல்லாமல் அவதிப்படும் மிக ஏழ்மையில் இருக்கும் கிராமப்புறங்களில் அறிமுகபடுத்தி இருக்க வேண்டும்.

இந்த திட்டமே வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு ஓட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒரு குறுகிய கால திட்டம் என்பதும், இந்த திட்டத்தை ஒருபோதும் யாராலும் நாடு முழுதும் அமல்படுத்த முடியாது என்பது ஜெயாவுக்கும் தெரியும். சில மாதங்களாக ஜெயாவால் அவசரம் அவசரமாக அறிவிக்கப்படும் திட்டங்களை நீங்கள் கூர்ந்து கவனித்தால் ஜெயாவின் மோசடியான உள்நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஜெயாவின் மோசடிக்கு ஒரே ஒரு உதாரணம், ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக ஆக்கப்படும் என்ற பச்சை பொய்யை நம்பி மக்கள் ஏமாந்து இன்றுவரை அவதிப்படுவதே போதுமானது.

@ ஆட்சி நிர்வாகம், மக்களுக்கான நீண்ட கால திட்டம் பற்றி எதுவும் சிந்திக்க தெரியாத ஒரு சராசரி முன்னாள் கவர்ச்சி நடிகை ஜெயாவுக்கு நாடு முழுதும் அமல்படுத்த முடியாத ஒரு ரூபாய் இட்லி போன்ற கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கும் அளவுக்குத்தான் அறிவு இருக்கும், அல்லது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு முடியும் தருவாயில் இருக்கும் திட்டங்களை திறந்து வைத்து தன்னால் உருவாக்கப்பட்ட திட்டம் என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அறிவித்துக் கொள்ள முடியும்.

1 comments :

Jeyavukkuu vetkam manam rosaM IRUKKAAA???

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!