Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, December 29, 2010

பள்ளிக்கு வந்த மாணவிக்கு திடீரென பிறந்தது குழந்தை!

உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவிக்கு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அடுத்த சேந்தமங்கலம் காலனியை சேர்ந்தவர் மல்லிகா (17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கு வந்த மல்லிகா, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதால், ஆசிரியர்கள் அவரை ஆட்டோ ஒன்றில் வகுப்பு தோழிகள் இருவருடன் வீட்டுக்கு அனுப்பினர். ஆனால், 

வீட்டிற்கு செல்லாமல், மல்லிகா உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்றதும் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்குள் சென்று சத்தம்போட்டு கதறினார். இதனால், மருத்துவமனை பணியாளர்கள் பதட்டமடைந்து கதவை திறந்து பார்த்த போது, மல்லிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது.தாயையும், குழந்தையையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். 

தகவலறிந்த ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!