Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, December 29, 2010

கருணா தவறான கருத்துகளை வெளியிடுகிறார்: எரிக்


அரசியல் காரணங்களுக்காக இலங்கை அமைச்சர் கருணா அடிக்கடி தவறான கருத்துகளை வெளியிடுகிறார் என்று நார்வே அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கருணா அளித்துள்ள சாட்சியத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் அனைத்தும் முழுப்பொய் என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது."விடுதலைப் புலிகளுக்கும் நார்வே அரசுக்கும் இடையிலான தொடர்பு குறித்து கருணா தெரிவித்துள்ள கருத்துகள் பொய்யானவை. அவர் கூறுவது போல் போர்நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் வாங்குவதற்கு நார்வே அரசு நிதியுதவி எதுவும் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கூறுவதெல்லாம் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகளாக உள்ளன. அவற்றில் எள் அளவும் உண்மையில்லை." என்று எரி்க் சொல்ஹெய்ம் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!