Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, June 21, 2012

வரலாறை எதிர்நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு!?

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. (வரலாறை எதிர்நோக்கி உள்ளது)

சர்வதேச பங்குச் சந்தை இன்று துவங்கியதுமே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை நோக்கி நகர்ந்தது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் மிகவும் சரிந்து 56.48 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.

பிறகு 11.35 மணியளவில் அதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு, 56.39 என்ற அளவிற்கு உயர்ந்த நிலையில்,பிற்பகல் மீண்டும் சரிந்து 56.57 என்ற அளவிற்கு மிகககடுமையான மற்றும் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டது. மேலும் இது வரலாறை எதிர்நோக்கி 60 டாலருக்கு கூடும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.

நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும் போது இந்திய ரூபாயின் மதிப்பு 56.15 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் இந்திய ரிசர்வ் வங்கி அவசர கதியில் செயல்பட்டு ரூபாயைக் காப்பாற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தெரிகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வெளிநாட்டு நிதிகள் பெருமளவில் வந்ததால், ரூபாயின் மதிப்பு பெருமளவில் அடி வாங்காமல் தப்பியது. ஆனால் ஏப்ரல், மே மாதத்தில் அன்னிய முதலீடுகள் குறைந்ததாலும், நிதி வரவு இறங்கியதாலும் தற்போது ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து இந்த நிலை நீடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் இது மேலும் மோசமாகி ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 60 ஆக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

(படத்தில் உள்ள குமார் என்பவர்தான் இந்த ரூபாயின் சிம்பிளை வடிவமைத்தார் இவருக்கு பாராட்டும், பணமும் கிடைத்தது மத்திய அரசாங்கத்தால் ஆனால் கோயிலில் மந்திரம் சொல்லும் பார்ப்பன குசும்பு இதை வடிவமைத்தலில் தவறு ஆதலால்தான் ரூபாயின் இந்த வீழ்ச்சி என்று இல்லாததை அவுத்து விட்டது, இதை பிரபல தொலைகாட்சியும் ஒளிபரப்பியது)

1 comments :

பார்ப்பன குடும்பு நன்னா இருக்கு

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!