Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, June 19, 2012

சின்னத்திரைக்கு மாற காரணம் கூறும் சீரியல் நாயகி?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவையானி. டைரக்டர் ராஜகுமாரனை திருமணம் செய்த பின்னர் வெள்ளித்திரையில் வாய்ப்பை குறைத்து கொண்டு, சின்னத்திரையில் களம் இறங்கினார்.

இருந்தும் அவ்வப்போது வெள்ளித்திரையில் கிடைக்கும் வேடங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் தனியார் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் நடிகை தேவையானி தனது கணவர் ராஜகுமாரனுடன் பங்கேற்றார்.

கடைதிறப்பு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவையானி, வெள்ளித்திரையை போல சின்னத்திரையிலும் சவாலான வேடங்கள் கிடைக்கின்றன. தற்போது முத்தாரம் என்ற தொடரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். போலீஸ் உடையை போட்டதும் அதற்குரிய கம்பீரம் வந்து விடுகிறது.

போலீஸ் வேடத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களை கவனிப்பதற்காகவே வெளியூர் ஷூட்டிங் எதிலும் நான் பங்கேற்பது இல்லை. ஏனென்றால் முதலில் குடும்பம் தான் முக்கியம், அப்புறம் தான் சினிமா எல்லாம் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!