Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, October 15, 2013

இனிமையான உறவு எது தெரியுமாங்க!?

கணவன் மனைவி ஒன்றாக வாழ்ந்து விட்டு இருவருக்குள்ளும் புரிந்து கொள்ளாமல் பிரச்சினையை பேசி தீர்க்காமல் பிரிகிறார்களே அவர்களுக்கு.

கணவன்-மனைவி உறவு எவ்வளவு இனிமையானது தெரியுமாங்க. அந்த உறவில் வரும் சின்னச் சின்ன ஊடல்கள், சண்டைகளுக்காக வக்கீலிடம் ஏங்க நீங்க போகனும். கோர்ட்டு கேசுன்னு ஏங்க நீங்க அலையனும். உங்களுக்கு உங்க பிரச்சினைகளை பேசித் தீர்க்க முடியாதா.?

உங்க ரெண்டு பேருக்கும் இடையில் சின்னச் சின்ன சண்டைகள் வரும் போது விவாகரத்து வரைக்கும் ஏங்க போக ட்ரை பண்னுரிங்க...?? பிரச்சினைகள் வரும் போது உங்களது பசுமையான பழைய நினைவுகளை ஒரு முறை நினைத்துப் பாருங்க.

அந்த நினைவுகள் எவ்வளவு அழகான சோலையாக இருக்கும் தெரியுமா...??? நீங்க ரெண்டு பேரும் ஒரு செடியில் பூத்த பூவாக இருப்பீர்கள் தெரியுமா..?? அந்த நினைவுகள் உங்களுக்கு சொர்க்கமாகவும் அந்த சொர்க்கத்தில் ஆதாம்-ஏவாலாகவும் நீங்கள் இருப்பீர்கள் தெரியுமா...??

உங்களுக்குல் சண்டைகள் வரும் போது ஒருத்தரோடு ஒருத்தர் மனம் விட்டுப் பேசுங்க. அவ யாருங்க உங்களுக்கு நீங்க தாலி கட்டிய மனைவி. அவரு யாருங்க உங்களுக்கு நீங்க கட்டிய கணவர். உங்க ரெண்டு பேரோட உறவுக்கு மேல ஒரு உறவு இந்த உலகத்தில் இருக்குமா சொல்லுங்க...??

நீங்க ஒருத்தரை ஒருவர் விவாகரத்து செய்யும் போது உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடாதா...??? உங்களுக்குத் தான் நிம்மதியான வாழ்க்கை அமையுமா....??? உங்க ரெண்டு பேரோட காதல் உங்கள் மனதில் ஏதோ ஒரு மூலையில் குத்திக் கொண்டு இருக்கும் அல்லவா புரிந்துகொள்ளுங்கள் ப்லீஸ்.  (சம்மாந்துறை அன்சார்).

எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது, தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

1 comments :

சரியாகச் சொன்னீர்கள்... விட்டுக் கொடுத்தால் அனைத்தும் நலம்...

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!