Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, August 18, 2013

டெல்லி சகோதரிக்கு நியாயம் கேட்டு போராடிய நல்லவர்களே?

இந்த அநியாயத்தை பரவலாக கொண்டு செல்லுங்கள் சகோதர, சகோதரிகள் அனைவரும் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்...! தமிழால் இணைவோம்.

டெல்லி சகோதரிக்கு நியாயம் கேட்டு போராடிய நல்லவர்களே - இங்கே ஒரு திருச்சி சகோதரி ( வயது - 13) சத்தம் போடாமல் இருக்க வாயில் மண்ணை நிரப்பி - கற்பழித்து பிறகு தடயத்தையும் அழித்து - தண்டவாளத்தில் தூக்கி எறிந்த கயவர்களுக்கு எதிராக நியாயம் கேட்க்க எழுவீர்.... மனசாட்சி உள்ள நியாயவான்களாக இருந்தால்.

திருச்சியில் கற்பழித்து படுகொலை செய்யபட்ட 13 வயது அப்பாவி மானவி, அன்புள்ளம் கொண்ட என் சொந்தங்களே, திருச்சி காஜாமலை பகுதியில் குடும்பத்தோடு குடியிருக்கும் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சகோதரி தவ்பீக் சுல்தானா, இவர் கடந்த 13.8.13 அன்று காலை பள்ளிக்கு சென்றவர் அன்று இரவாகியும் வீடு திரும்பவில்லை.

மறுநாள் அவருடைய சடலம் நிர்வான நிலையில் சிதைக்கப்பட்டு தன்டவாளத்தில் கிடைத்திருக்குறது, காமுகர்கள் அவரை வாயில் மண்னை நிரப்பி சப்தமிடமல் அடைத்து கற்பழித்து படுகொலை செய்துவிட்டு தடயத்தை அழிப்பதற்க்காக ரயில் தன்டவாளத்தில் வீசியிருக்கிறார்கள்.

கொலை செய்யபட்டவர் கற்பழிக்கபட்டார் என்பதை பிரேதபரிசோதனையில் உறுதி படுத்தகூடிய சில உடல் உறுப்புகளை காணவில்லை,அதை காவல்துறையை சேர்ந்தவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதோடு மட்டும் அல்லாமல் வழக்கை தற்க்கொலை வழக்காக திசை திருப்ப முயர்ச்சிக்கிறார்கள்.

அத்தோடு மட்டும் அல்லாமல் இன்று காலையில் சம்பந்தபட்ட சிறுமியின் வீட்டிற்க்கு வந்த ரயில்வே காவல் ரவுடிகள் பிரதத்தை வாங்கிக் கொண்டு அடக்கம் செய்துவிட்டு பிரச்சனை பன்னாமல் சென்றுவிடுங்கள்என்றுமிரட்டும் தொனியில் பேசியிருக்கார்கள்.

டெல்லி மாணவியின் செய்தியை உலகம் முளுளுவஹும் கொண்டு சென்ற ஊடகங்கள் அனைத்தும் இந்த மாணவியின் செய்தியை வெளியிடாமல் மௌனம் சாதிக்கின்றன. ஏன்? இதை செய்தவர்கள் அதிகார பலம் கொண்ட பின்னணி கொண்டவர்கள் என்பதாலா?

முகநூலில் இந்த அநியாயத்தை பரவலாக கொண்டு செல்லுங்கள் சகோதர சகோதரிகள் அனைவரும்.. நீதி கிடைக்கும் வரை போராடுவோம்...!

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!