Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, August 26, 2013

தி நகரில் புதைக்கப்படும் உண்மைகள்!?

சென்னை: தி நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெயசந்திரன் குழுமங்களில் வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தபடுகின்றனர. பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்க உள்ளாக்கபடுகின்றனர்.

இங்கே நடக்கும் பெரும் அநியாயங்களை ஊமை ஊடகங்கள் ஏனோ மறைத்து விடுகின்றன. கடந்த 29.5.13 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு சரவணா செல்வரத்தினம் நிறுவனத்தில் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்த ரம்யா(20) என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார. இந்த செய்தி தி.நகர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அத ிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அப்பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை மறைத்து விட்டு, அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞரை அப்பெண் காதலித்ததாகவும், அவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கதை கட்டுகிறது சம்பந்தப்பட்ட நிர்வாகம் தற்கொலைக்கு தூண்டியதாக பழி சுமத்தப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதைக்குளளாக்கப் பட்டு வரும் அப்பாவி இளைஞர் சுரேந்தர் நெல்லை மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவராவார்.

இந்த சம்பவத்தை தற்கொலை என்று சொல்வது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானதாகும்.

சம்பந்தப்பட்ட இருவரும் வெவ்வேறு கிளை நிறுவனங்களில் பணிபுபுரிந்து வருபவர்கள். இந்நிறுவனத்தின் விதிமுறைகளின் படி, இவர்கள் இருவரும் சந்திக்க கூட முடியாது. இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவரகள். அறிமுகமில்லாத இவர்கள் இருவரும்எப்படி காதலித்திருக்க முடியும்....?.. ?..?

இந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த இடம் எதுவென்று தெரியுமா இதே சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதியில்தான்.

சம்பவத்தன்று அந்த பெண் உடல் நிலை சரியில்லாததால், விடுமுறையில் இருந்துள்ளதாக அந்நிறுவனத்தின் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அப்பெண்ணுடன் பணிபுரியும்மற்ற பெண்களிடம் விசாரிக்கையில், அந்த பெண் யாரையும் காதலிக்கவில்லைய ென்றும், சம்பவத்தன்று விடுப்பு எடுப்பதாக தெரிவிக்கவில்லையென்றும அப்பெண்ணுக்கு உடல் நிலையில் எந்தபிரச்சனையும  இல்லையென்றும் தெரிவிக்கின்றனர ். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் அந்த பெண்ணைத்தவிர வேறு யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால் விடுதியின், பெண் காப்பாளர், விடுதி காவலர், மற்றும் பணியாளர்கள் எங்கே போனார்கள்..??..?

மதியம் சரியாக 3.30 மணிக்கு அனைவரும் வேலை காரணமாக வெளியே சென்றிருப்பார்க ளோ..? அப்படியென்றால் நடந்தது என்ன..?

தற்கொலையா.? அல்லது பாலியல் வன்புனர்வினால் ஏற்பட்ட கொலையா..? இல்லையென்றால் அப்பெண்ணின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் சடலத்தை அப்பெண்ணின் குடும்பத்திடம் ஒப்படைத்தது ஏன்.?..?

பழி சுமத்தப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் நிலை என்ன ?

இந்நிறுவனத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது புதிதல்ல அப்படியிருந்தும இந்நிறுவனத்தின் மீது இது வரையில் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

VIP முகமூடி அணிந்துள்ள இம்மாதிரி சமூக விரோதிகளின் மீது அதிகார வர்க்கமும் காவல் துறையும் கனிவு காட்டுவது ஏனோ.?

இந்நிகழ்வுகளுக்கு முடிவு தான் என்ன..? அந்நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற பெண்களின் என்ன வழி.

--விடை தெரியாமல் தி.நகர் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

2 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!