Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, August 5, 2013

உருண்டும் புரண்டும் உறக்கம் வரவில்லையா?

நம்மில் அநேகர் சரியான தூக்கம் இல்லாமல் அவதி படுகிறோம் அப்படி சரியான தூக்கம் வராமல் அவதி படுபவர்கள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை உபயோகித்து பார்க்கலாமே!.

இரவில் உணவருந்திய பின் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடுங்கள்  நிம்மதியாக தூங்கலாம் வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி சாதத்தோடு பிசைந்து சாப்பிட தூக்கம் இல்லாமல் துன்பப்படும் நோய் குணமாகும் நரம்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.

இரவில் தூக்கம் வரவில்லை என்றால் கசகசாவை தூள் செய்து வைத்து கொண்டு படுக்க போகும் போது அதை பாலில் கலந்து சாப்பிடுங்கள் சுகமான தூக்கம் வரும் இரவில் தூங்கும் முன் சூடான பசும்பாலில் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும் நியாபக சக்தி பெருகும்.

தூங்கும் போது கண்டபடி தூங்க கூடாது பொதுவாக வலக்கை பழக்கமுள்ளவர்கள் இடப்புறமாகவும் இடக்கை பழக்கமுள்ளவர்கள் வலது புறமாகவும் திரும்பி படுக்க வேண்டும். 

எந்த கரங்களுக்கு வேலை மிகுதியோ அந்த கரம் மேலே இருக்கும் படி படுத்து தூங்கினால் தான் சரியான ஒய்வு கிடைக்கும்.

இரவில் படுக்கும் முன் இரண்டு கால்களையும் நன்றாக அழுத்தி தேய்த்து விடுங்கள் நல்ல தூக்கம் வரும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

இது ரொம்ப ரொம்ப முக்கியம் யாருக்கும் கெடுதல் நினைக்காமல்  யாரையும் கெடுத்து பேசாமல் வாழுங்கள், நல்ல தூக்கம் வரும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!