ShareThis

Powered by Blogger.
போப்ஸ்கஞ்ச் துப்பாக்கிச்சூடு: ஓர் ஆண்டு நிறைவடைந்தும் நீதி கிடைக்கவில்லை.//.நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம் – ‘பிரதமர் பதவிக்கு நிறைய பேர் உள்ளனர்.//.லஞ்சம்:கர்நாடகா பா.ஜ.க எம்.எல்.ஏவுக்கு 3 1/2 ஆண்டு சிறை.//. ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு :காங்கிரஸ் நாளை முடிவு.//காற்றுப்போன பலூனாக காவி அரசியல்.//. கட்சித் தலைவர்களின் படங்களை ஒட்டியிருந்த 7 கார்கள் பறிமுதல் .

காவி கயவர்களின் கண்டிக்கத்தக்க செயல்!!

>> Friday, February 24, 2012

பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மற்றும் அவரது உறவினரும், பட்டிமன்ற பேச்சாளருமான ராஜாவிற்கு எதிராக இந்துமுனன்ணியினர் கருப்புக்கொடி கட்டியுள்ள சம்பவம் நெல்லையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி டவுன் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒருபகுதியாக, பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதற்காக சாலமன் பாப்பையா மற்றும் ராஜா நெல்லைக்கு வருகை தர உள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில், மற்றொரு மத வழிபாட்டு தலத்தில் கலந்துகொண்ட இவர்கள் இந்து கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகை தரக் கூடாது என்பதை வலியுறுத்தி பாப்பையா மற்றும் ராஜா தங்க உள்ள ஹோட்டலைச் சுற்றிலும் இந்துமுன்னணி அமைப்பு சார்பில் கருப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் இச்சம்பவம் பற்றி மனித ஆர்வலர் ஒருவர்., காவி கயவர்களின் கண்டிக்கத்தக்க செயல் என்று அவர் சொன்னார்.

0 comments:

Post a Comment

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP