Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, January 1, 2014

இரட்டை முக துர்கா நாக்பாலின்!?

உத்தர பிரதேச அரசால் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் பெண் அதிகாரி துர்கா நாக்பாலினை மணல் கொள்ளையர்களுக்கு எதிராக போராடிய வீரநாயகியாக ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் மற்றும் பலரும் வீரபரிவேசம் கெட்டும் போது காதல் பூர்கிராமவாசிகளுக்கு துர்காவை பற்றி சொல்ல விரும்புவது வேறொன்றாக இருக்கிறது.

70 சதவிகிதம் இசுலாமிய மக்கள் தொகை கொண்ட காதல்பூர் கிராமத்தில் இசுலாமிய வணக்கத்தலத்தை இடித்து தகர்க்க ஜூலை 27ம் தேதி தலைமை தாங்கியது துர்கா நாக்பால் என்று கிராமத்தார்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

டெல்லியோடு சேர்ந்த கிரேட்டர் நோய்டாவில் கெளதம்பூத் நகரில் அமைந்திருக்கிறது உலகளவில் சர்சை செய்யப்பட்ட விவாதத்தின் மைய பகுதியான காதல்பூர் கிராமம்.

காதல்பூருக்கு வருகை தந்த ஜமாத்தே இசுலாமிய செயலாளர்களான முஹம்மது அஹ்மது, எஞ்சினியர் முஹம்மது சலீம் ஆகியோரோடு கிராம மக்கள் நடந்த சம்பவங்களை தெளிவு படுத்தினார்கள்.

சப்- டிவிசன் மாஜிஸ்டிரேட் என்ற நிலையில் எச்சரிக்கை அறிக்கை கூட அளிக்காமல்சம்பந்தபட்ட அரசு அதிகாரிகளிடம் அணுமதி வாங்கவில்லை என்ற காரணம் கூறி பள்ளி வாசலின் சுற்று சுவர்களையும் மேல் தளத்தையும் துர்காவின் உத்தரவிற்கிணங்க இடிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனாலும் பள்ளிவாசல் கட்ட கிராம பஞ்சாயத்தின் அணுமதி வாங்கப்பட்டு இருக்கிறது என்று கிராம தலைவி அப்ரோஸ்வின் கணவர் முஹம்மது செரீப் தெரிவித்தார்.துர்காவின் நடவடிக்கைகள் எங்களை திடுக்கிட செய்தது என்றும் செரீப் தெரிவித்தார்.

காதல் பூரில் கட்டுமாண பணியில் இருக்கும் பள்ளிவாசல் அணுமதி வாங்காமல் கட்டப்பட்டு வருகிறது என்றும் பள்ளிவாசல் இடிக்கப்பட நேரலாம் என்றும் துர்கா முன்னரே அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து பள்ளி வாசலை சட்டப்படி பதிவு செய்து கொள்ள சிறிது கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அதுவரை நாங்கள் கட்டுமாண பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என்றும் கிராம மக்கள் துர்காவிடம் கோரிக்கை மணுவும் அளித்து இருந்தார்கள்.

பள்ளிவாசல் கட்ட முன் அணுமதி வாங்க வேண்டும் என்ற சட்ட அறிவு இல்லாத கிராம மக்கள் சட்டப்படி அணுமதி வாங்கும் வரை கட்டுமாண பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என்றும் துர்காவிடம் சம்பவ சமயத்தில் உறுதியும் அளித்து இருந்தார்கள்.

ஆனால் இதனை ஒன்றும் காதில் வாங்கி கொள்ளாமல் ஐ.ஏ.எஸ் அதிகாரி ..!? துர்கா பள்ளிவாசலை இடிக்க உத்திரவிட்டு இருக்கிறார்.

பள்ளிவாசலின் சுற்று சுவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவையாகும்.இரண்டு மாதங்களாக பள்ளிவாசலின் கட்டுமாண பணிகள் முன்னெடுத்தும் செல்லப்பட்டு வருகின்றன.

பள்ளிவாசல் இடிக்கப்பட்ட சம்பவத்தில் துர்காவிற்கு குற்றமற்றவர் என்ற மாவட்ட நீதிபதியின் அறிக்கையை நாங்கள் ஏற்று கொள்ள போவதில்லை என்று தெரிவிக்கும் கிராம மக்கள்.விசாரனை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி சம்பவ இடத்தை கூட பார்வையிடாமலும், கிராம மக்களுடன் பிரச்சனை குறித்து ஆராயமலும் ஒரு தலைபட்சமாக தீர்ப்பு வழங்கி இருக்கிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
.
சம்பவ இடத்தை பார்வையிடாமல் விசாரனை அறிக்கையை எங்கனம் வழங்கினார்? என்று கிராம முக்கியஸ்தர் அஹ்மத் கேள்வியை உயர்த்துகிறார்.

மணல் கொள்ளையர்களுக்கு எதிராக நடந்து கொண்டதால் தான் துர்கா தண்டிக்கப்பட்டார் என்பதை கிராம மக்கள் நம்பவில்லை.மாறாக அகம்பாவத்துடன் பள்ளிவாசலை இடித்தற்கான தண்டனையே துர்காவிற்கு கிடைத்திருக்கிறது என்று கிராம மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

மேல் தளம் தகர்ப்பட்ட பள்ளிவாசலில் தற்போது பந்தல் அமைத்து பள்ளிவாசலாகவும் நிலை நிறுத்தி இருக்கிறார்கள் கிராம மக்கள்.

இதனிடையில் வக்பு போர்டு உறுப்பினர் ஒருவர் துர்காவிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைவிட்டு இருப்பது, கிராம மக்களை ஆத்திரமடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

@ இசுலாமியன் என்றால், அதிகார வர்க்கம் அவன் சவத்தையும் தோண்டி எடுத்து குத்தும்!.

கோயபல்சுகளின் ஊடகங்களின் தராதரத்திற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு இத்தகைய ஊடகங்களில் வரும் செய்திகளை நம்புபவர்களை பொய்யான வாழ்க்கையில் திட்டமிட்டு தள்ளுகிறது. தராதரமற்ற ஊடகங்களை மக்கள் புறம் தள்ளாதவரை நாட்டில் அமைதி என்பது கானல் நீரே. 


ஊடகங்கள் சரியான செய்தியை தருகிறதா?ஐ.ஏ.எஸ் அதிகாரி..!? துர்கா நாக்பாலின் இரட்டை முகம்!.

 

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!