Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, October 25, 2014

நம்மிடம் வந்த ஒரு முகநூல் கேஸ்!?

ஒரு பெண் திருமணமானவர் ஒரு பெண் குழந்தை உண்டு கணவரும் அப்பாவும் வெளிநாட்டில் இவர் அம்மாவின் பராமரிப்பில் (இந்தம்மா பேஸ்புக்கில்).

அடிக்கடி மகளின் படத்தை முகநூலில் இட்டு லைக் வாங்குவார் கமெண்ஸில் பூரிப்பார் ,இவ்வழியில் நட்பில் இணைந்தார் ஒருவர். அவர் மகளைப் புகழ்ந்து அடிக்கடி இன்பாக்ஸ்இல் ஜொள்ளு வடித்திருக்கிறார் ,ஒருநாள் "இந்த குட்டி இவளோ அழகா இருக்கே இவங்கள பெத்த அம்மா எவளோ அழகா இருப்பாங்க ப்ளீஸ் ஒரு போட்டோ காட்டக்கூடாதா?" என் வழிந்துள்ளார்.

பெண் அப்படியே அங்கமெல்லாம் பூரித்து ஒரு படத்தை அனுப்பிவிட்டார்- அடுத்து அதை பார்த்த நபர் "என்னங்க க்ளோஸாவே இல்ல இன்னொரு படம் நல்ல மேக்கப் போட்டு க்ளோஸா அனுப்புப்பா என்றதும் (பெண் உஷாராகி "உங்க படம் அனுப்புங்க அப்பதான் நான் அனுப்புவேன் என்று சொல்ல) அவர் ஒரு பிரபலமல்லாத ஹிந்தி மாடலிங் ஆளின் படத்தை அனுப்பி இது நான் தான் இப்ப கொஞ்சம் கருத்துட்டேன் துபாய் ல என் வேலை அப்படி என்று புளுகியிருக்கார்.

பொண்ணு அவர் அழகுல மயங்கி அவர் கேட்ட போதல்லாம் டிசைன் டிசைனா படம் எடுத்து அனுப்பிடுச்சு ஆனால் அண்ணன் அப்பறம் தான் வேலையை காட்ட ஆரம்பிச்சிருக்கார்.

அசிங்கமான படங்கள் கேட்டு தொல்லை ,இந்த பெண் சந்தேகம் கொண்டு உங்க அம்மா தங்கை படமிருந்தால் எனக்கு அனுப்புங்க என்று கேட்க அவர் மறுத்துவிட்டார்(அப்படி யாரும் இருந்தாதானே அனுப்புவான் இந்த நாயெல்லாம் என்னைக்கோ குடும்பத்தை விட்டு விரட்டி இருப்பாங்க).

மேற்கொண்டு படங்கள் அனுப்பாத காரணத்தால் அவன் மிரட்ட ஆரம்பிக்க இந்த பொண்ணுக்கு டர்ர்ர்ரு ஸ்டார்ட்.

அவன் மேல் இருந்த அதீத நம்பிக்கையில் துபாயில் அவள் கணவர் தந்தை இருக்கும் இடங்களையும் தெரிவித்திருக்கிறாள் - இதுபோதும் அவனுக்கு அவளை மிரட்ட அவள் கெஞ்சியும் அவன் விடவில்லை இந்தப்பெண் ப்ளாக் செய்தும் அவன் வேறு பெயர்களில் முன்பே நட்பில் இணைந்திருந்தபடியால் தப்பிக்க முடியவில்லை.

உதவி கேட்டு நம் சகோதரர் ஒருவரை அனுகவே அவர் உன் ஐடியை டீஆக்டிவேட் செய் வேறு ஐடியில் அவன் நட்பு வட்டத்து பெயர்களை (mutual friends )இணைக்க வேண்டாம் என்றும் அந்நிய ஆடவருடன் சகஜமாக பேச உங்களுக்கு எப்படி துணிச்சல் வருகிறது என்றும் உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரத்தை ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள் என்றும் செமத்தியாக திட்டி அனுப்பினார்.

அடுத்தவன் யாரென்றே தெரியாமல் எப்படி அவன் அனுப்பிய படத்தை நம்பினாய்,உன் புருஷனை விட அந்த கேவலப்பட்ட நாய் எந்த விதத்தில் உயர்ந்தவன் ,வெளிநாட்டில் இருக்கும் உன் கணவன் உன்னோடு பேசிக்கொள்ளத்தானே இந்த அனுமதியை உனக்கு வழங்கியுள்ளான் அதை நீ அத்துமீறலாமா? என்று அறிவுரை கூறப்பட்டது.

பெண்களே! முகநூல் ஒரு இருள் உலகம் இங்கு எல்லோருக்கும் ஒரு கரிய முகம் உண்டு உங்கள் படங்களை எத்தன்மை வாய்ந்ததாயினும இங்கு பதிவிட வேண்டாம்.

உங்களை அறிந்த மக்கள் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை நன்கறிவார்கள் அதுபோல நீங்கள் அறியாத நண்பர்கள் எத்தன்மைவாய்ந்தவர் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்!

அப்படி கட்டாயம் உங்கள் முகத்தை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்றால் அதனால் வரும் பின்விளைவுகள் மற்றும் இழப்புகளை தாங்கிக்கொள்ள தயாராய் இருங்கள்!

அந்த துணிச்சல் இருந்தால் இந்த அறிவுரையை தூக்கி எறியுங்கள் ! செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாகப் பெண்கள் தான். 

அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்கள் அறவே வேண்டாம். அறிமுகம் இல்லாத, அவ்வளவாக பழக்கமில்லாத நபர்களிடம் சொந்த தகவல்களை பகிர்வது, வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற செயல்களையும் பெண்கள் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். விக்கிறவனுக்கு ஒரு கண் போதும், வாங்குகிறவனுக்குத் தான் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அது போல ஆண்களை விட பெண்கள் எப்போதும் ஒரு படி மேலே ஜாக்கிரதை உணர்வோடு செயல்பட்டால் இது போன்ற சுய கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் நிலைமையிருந்தும், சமூக நெருக்கடிகளில் இருந்தும், பல இழப்புகளிலிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!