Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, November 11, 2013

வாழ்க்கையை திருப்பி தர முடியுமா உங்களால்??

மேல் படத்தை நன்கு அவதானியுங்கள் எந்த குற்றமும் புரியாமல் சந்தேகத்தின் பெயரிலேயே பல வருடங்கள் ஜெயில் வாழ்க்கை இவருடைய இளைமையை திருப்பி தர முடியுமா கா(வி)வல்துறை அல்லது இந்திய அரசாங்கம்?.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : 12 ஆண்டுக்குப் பிறகு 'நிரபராதி' என 'முஹம்மத் ஹனீப்' விடுவிப்பு!

ஊர் திரும்ப பணமில்லாமல் மேலும் 2 மாதம் ஜெயிலில் வேலை செய்த அவலம் !!

சோக கதை கேட்டு தாய் உள்ளிட்ட கிராம மக்கள் கண்ணீர் !!!

அப்பாவி விடுதலைப் பற்றி எந்த ஒரு ஊடகமும் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை. முஸ்லிம் பெயரில் ஒருவன் சிக்கினால் மட்டும் முதல் பக்கத்தில் செய்தி போட்டு காசு பார்க்கும் விபச்சார ஊடகங்கள் கைது செய்யப் பட்டவர்  அப்பாவி என்று விடுவிக்க பட்டால் அச் செய்தியை பற்றி கண்டுக் கொள்வதே இல்லை .

காவல்துறை யாரை தீவரவாதிகள் என்று பிடிக்கிறதோ அவர்கள் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப் படும் வரை அனைவரும் அவர்களை தீவிரவாதி என்று தான் சொல்ல வேண்டும்.அவர்களுக்கு யாரும் சப்போர்ட் செய்ய கூடாது.அப்படி செய்தால் அவர் தேச துரோகி என்று கூப்பாடு போடும் போலி நியாயவான்களே.

இவரின் 12 வருட வாழ்க்கையை திருப்பி தர முடியுமா உங்களால்??

இவர் அனுபவித்த சொல்லனா துயரங்களுக்கு நிவாரணம் தர முடியுமா உங்களால்??

தொலைந்த அவரின் இளைமையை திருப்பி தரமுடியுமா உங்களால்??

அவர் தாய் பட்ட வேதனைகளுக்கு ஆறுதல் சொல்லி அவரின் மனதை தேற்ற முடியுமா உங்களால்??

இது முதல் முறையா நடக்கிறது நமது நாட்டில் .நாட்டில் இதுவல்லவே முஸ்லிம்களுக்கு எதிரான தொடர்கதையாக இருக்கிறது.

நாட்டை சூரையாண்டவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்க அப்பாவிகள் ஆண்டுக் கணக்கில் சிறைவாசம் அனுபவித்து விட்டு தங்கள் வாழ்க்கையை இழந்து நாடு ரோட்டில் நிற்பதா?? இந்த அவல நிலை, நிச்சயம் சத்தியம் வெல்லும்.
 

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!